Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பன் சன்னிதானத்தில் கண்ணீர் ... சபரிமலையில் வென்றது சரண கோஷம்! சபரிமலையில் வென்றது சரண கோஷம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலைக்கு நேற்றும் (அக்.,22ல்) 5 பெண்கள் பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர்
எழுத்தின் அளவு:
சபரிமலைக்கு நேற்றும் (அக்.,22ல்) 5 பெண்கள் பக்தர்கள் எதிர்ப்பால் திரும்பினர்

பதிவு செய்த நாள்

23 அக்
2018
12:10

சபரிமலை:சபரிமலை ஐப்பசி மாத பூஜையின் ஐந்தாம் நாளான நேற்று (அக்., 22ல்) தரிசனத் துக்கு சென்ற ஐந்து பெண்களும் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றனர். நேற்று (அக்.,22ல்) இரவுடன் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட தால் கேரளாவின் மாடலிங் அழகி ரஹானா பாத்திமா, ஆந்திரா தனியார் டிவி நிருபர் கவிதா உள்ளிட்ட சிலர் செல்ல முயன்றனர்.

பக்தர்கள் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப் பட்டனர். தினமும் சில பெண்கள் வருவது, போலீசார் அழைத்து வருவது என நாடகம் அரங்கேறி வந்தது. நேற்றும் கேரளா நெடுங்குன்றத்தை சேர்ந்த பிந்து டி வாசு, 35, என்ற பெண் சன்னிதானம் செல்வதற்காக எருமேலியில் போலீ சாரிடம் அனுமதி கோரினார்.

பஸ், போலீஸ் ஜீப் என மாறிமாறி அவரை போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் எல்லா இடங்களிலும் பக்தர்கள் மறித்தனர். இறுதியில் சபரிமலை செல்லவில்லை என போலீ சாரிடம் தெரிவித்தார். எனினும் நெடுங்குன்றத்தில் நடக்கும்போராட்டத்தால் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் மாலை வரை போலீசார் தவித்தனர்.

நீலிமலை வரை... இதுபோல ஆந்திராவில் இருந்து நான்கு  பெண்கள், சக பக்தர்களுடன் வந்தனர். இதில் மூன்று பேர், பக்தர்களின் எதிர்ப்பால் பம்பைக்கு முன்பே திரும்பி சென்று விட்டார்.

ஒருவர் மட்டும் தலையை துணியால் மூடியபடி நீலிமலை வரை வந்தார். அங்கு பக்தர்கள் மறித்து திருப்பி அனுப்பினர். இதனால் அவரும் பம்பை திரும்பினார். தீர்ப்பு வந்த பின் ஐந்து நாட்கள் நடை திறந்திருந்த நிலையில் 15 பெண்கள் சபரிமலை வந்து தரிசனம் நடத்த முடியாமல் திரும்பினர். ஆயிரக்கணக்கான போலீசார் இருந்தும் ஒருவரை கூட தரிசிக்க செய்ய முடியவில்லை.

* இந்த விஷயத்தில் அரசு இருதலைக் கொள்ளி எறும்பாக தவிக்கிறது. ஒருபுறம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்; மறுபுறம் எந்த சமரசத்துக்கும் தயாராகாத பா.ஜ., ஏற்படுத்தும் கலவரம்.
* லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ., செயல்படுகிறது. தற்போதைய நிலைபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க தேவசம்போர்டு எடுத்த முடிவு சரியே. கடகம்பள்ளி சுரேந்திரன் தேவசம்போர்டு அமைச்சர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar