பதிவு செய்த நாள்
23
அக்
2018
01:10
தர்மபுரி: பிரதோஷத்தையொட்டி, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், நேற்று (அக்., 22ல்), சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி நெசவாளர் காலனி, மகாலிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி பகவானுக்கு, மாலை, 5:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேங்கள் நடந்தன.
மாலை, 5:30 மணிக்கு மேல், நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. மாலை, 6:00 மணிக்கு மேல், மூலவ மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் கோவில் உட்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், நேற்று (அக்., 22ல்), சிறப்பு பூஜை நடந்தது.