பதிவு செய்த நாள்
23
அக்
2018
02:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று 22ல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையில் ஆய்வு நடந்தது.மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த செல்வகுமார், திருச்சி தென் மண்டல சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.அதில், மீனாட்சி அம்மன் கோவிலின், திருவாச்சி மண்டபத்தில் சுடர் விளக்கு, கற்தூண்கள், மேடையில் பளிங் காலான தட்சிணாமூர்த்தி சிலை உள்ளிட்ட ஏழு பொருட்கள் மாயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந் தார்.டி.எஸ்.பி., மலைச்சாமி தலைமையில், எஸ்.ஐ.,க்கள் சந்தானம், கவிதா ஆகியோர், நேற்று 22ல் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். திருவாச்சி மண்டப சுடர் விளக்கு, அதே இடத்தில் இருந்தது.அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதியில், கற்தூண்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. மேடையில் இருந்த தட்சிணாமூர்த்தி பளிங்கு சிலை, சம்பிரதாயம் கருதி, ஆயிரங்கால் மண்டபத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதை உறுதி செய்தனர்.