குமாரபாளையம்: சங்கடஹர சதுர்த்தி, ஐப்பசி மாத சனிக்கிழமையையொட்டி, குமாரபாளையம், உடையார்பேட்டை ராஜவிநாயகர், அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர், திருவள்ளுவர் நகர் சவுந்தரராஜ பெருமாள், மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர், கோட்டைமேடு சிவபெருமான், சவுண்டம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், கணபதி மற்றும் பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.