Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் கிருஷ்ணர் கல்யாண ... திண்டிவனம் தீவனூர் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் திண்டிவனம் தீவனூர் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

29 அக்
2018
11:10

உத்திரமேரூர்: தன் தலையை தானே அறுத்து, காணிக்கைக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிலை, திருவானைக்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவிலில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தன் கழுத்தில், தானே கத்தி வைத்து அறுக்கும் ஆண் உருவ சிலை, பல ஆண்டுகளாக உள்ளது.

இச்சிலை குறித்த வரலாறு அறியாத மக்கள், முன்னோர் வழியில், சாவான் சாமி என, பூஜிக்கின்றனர். இதுகுறித்து தகவல்அறிந்த, உத்திரமேரூர் பகுதி வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி மற்றும் அதன் உறுப்பினர்கள் கோகுல கிருஷ்ணன், சுரேஷ்குமார் உள்ளிட்டோர், அப்பகுதிக்கு சென்று சிலையை ஆய்வு செய்தனர். இந்த சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிலை என, தெரிவித்தனர். இதுகுறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி கூறியதாவது: பழங்காலத்தில், அரசர்கள், எதிரிகளோடு போர் தொடுக்க, படையெடுத்து செல்லும் போது, தனக்கு வெற்றி கிடைக்க, படை வீரர்களில் ஒருவன், தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த உயிர் துறத்தலை, ‘அவிபலி’ என, தொல்காப்பியம் கூறுகிறது. இச்செய்திகள் சங்க இலக்கியங்களிலும், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் போன்ற நுால்களிலும் காணப்படுகின்றன. அதில், பலி கொடுக்கப் பட்ட வீரன், எந்த அரசருக் காக இச்சம்பவம் நிகழ்ந்தது, போர் விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.இதற்கு முன், திருப்புலிவனத்தில் இது போன்ற ஒரு சிலை கண்டெடுத்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 
temple news
அயோத்தி (உ.பி.), குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் மார்ச் 19 அன்று அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar