காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் வருடாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2018 12:10
காரைக்குடி:காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் வருடாபிேஷக விழா நேற்று முன் தினம் (அக்., 27ல்) முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது.
நேற்று (அக்., 28ல்) காலை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. காலை 10:15 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னதானம் நடந்தன.மாலை 5:30 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்தனர்.