பழநி;பழநியில் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், அடிவார மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் காலை முதல்குவிந்த பக்தர்கள், புதுமணதம்பதிகள் ரோப்கார், வின்ச் ஸ்டேசனில் ஒருமணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர்.
மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அடிவாரம் ஆண்டவன் பூங்காரோடு, இடும்பன்மலைக்கோயில் ரோடு, பஸ் ஸ்டாண்ட் அடிவாரம்ரோடு ஆகிய இடங் களில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், தரைக்கடைகள், தடையுள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தியதால் நேற்று (அக்., 28ல்)போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.