பதிவு செய்த நாள்
29
அக்
2018
12:10
விக்கிரவாண்டி: தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் கருவறை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வருகிறது, நேற்று, கைலாசநாதருக்கு கருவறை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. அதை முன்னிட்டு, விநாயகர், முருகன், சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 8.10 மணியளவில் பூமி பூஜையும், மகா தீப ஆராதனையும் நடந்தது.
பூஜைகளை, புதுச்சேரி சரவணன் செய்தார். முன்னதாக புதுச்சேரி நட்டம் பயின்றாடும் நாதன் இசைக்கூட்டம் குமார் தலைமையில், கைலாய வாத்தியம் முழங்க, சிவனடியார்கள் நடனமாடினர். சிவனடியார் கல்யாணி தலைமையில் திருவாசகம் முற்றோதினர். தொரவி சுப்ரமணி, புதுவை ராதாகிருஷ்ணன், ஜோதிடர் கார்த்திகேயன், கந்தன் நாராயணசாமி, குப்புசாமி, ஸ்தபதி பழனி, முன்னாள் பஞ்., தலைவர் நாகேஸ்வரி சங்கர், வழக்கறிஞர் சம்பத், ரவி, பாலையா, மாலதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.