திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் நெல்லையப்பர் கோயிலில் நேற்று துவங்கியது. தமிழகத்தில் உள்ள கோயில்களின் அர்ச்சகர்கள், ஓதுவார்களுக்கு 6 வாரம் புத்தொளி பயிற்சி அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் நெல்லையப்பர் கோயில் உட்பட 25 கோயில்களில் நேற்று துவங்கியது. நெல்லை மாவட்ட கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கான புத்தொளி பயிற்சி முகாம் நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் நேற்று மதியம் துவங்கியது. இதில் அரசு இசைப் பயிற்சி பள்ளி ஆசிரியர் சொக்கலிங்கம் அர்ச்சகர்கள் மற்றும் ஓதுவார்களுக்கு ஆகம விதிப்படி உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினார். இதில் மாவட்டத்தை சேர்ந்த 12 அர்ச்சகர் மற்றும் ஓதுவார்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியானது தொடர்ந்து 6வாரம் நடைபெறவுள்ளது.