பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 18 நாட்களில் ரூ. ஒரு கோடியே 34 லட்சத்து 21ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி முருகன்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் -585 கிராம், வெள்ளி- 7,140 கிராம், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்- 250 உள்ளது. ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 34லட்சத்து 21ஆயிரத்து 220 கிடைத்துள்ளது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், உதவிஆணையர் சிவலிங்கம், வங்கிப் பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.