பதிவு செய்த நாள்
31
அக்
2018
12:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூபாய் 73 லட்சத்து 35 ஆயிரத்து 425 ரூபாய், தங்கம் 101 கிராம், வெள்ளி 2 கிலோ 260 கிராம் லட்சம் இருந்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 32 நாட்களுக்கு பிறகு நேற்று (அக்., 30ல்) சுவாமி, பர்தவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணினர்.
இதில் ரொக்க பணம் 73 லட்சத்து 35 ஆயிரத்து 425 ரூபாயும், தங்கம் 101 கிராம், வெள்ளி 2 கிலோ 260 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கையை கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன், கலைசெல்வன், கோயில் ஊழியர்கள் மற்றும் பர்வதவர்த்தினி, விவேகானந்தா பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.