கன்னிவாடி கசவனம்பட்டி அருகே கொரலம்பட்டி சவடம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2018 12:10
கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே கொரலம்பட்டி சவடம்மன் கோயிலில், மண்டலாபிஷேகம் நடந்தது. செப். 12ல், கும்பாபிஷேகம் நடந்ததைத் தொடர்ந்து, தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. நேற்று (அக்., 30ல்), 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. சிறப்பு பூஜைகளுடன், மூலவர், பரிவார தெய்வங்களுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.