சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2018 04:10
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் சொர்ண ஆகாஷ பைரவருக்கு சிறப்பு பூஜை; ஐந்து கால பூஜைகள் நடந்தன. திண்டுக்கல், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பைரவருக்கு மஞ்சள், செவ்வரளி பூக்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் காட்சியளித்தார்.