Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனந்த விரதம் அங்க பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 9. அனந்த விரதம்
நிவேதன மந்த்ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2018
04:10

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே
சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்புத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே அஸ்மிந் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபாவதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே *....நாம ஸம்வத்ஸரே, *........அயனே, *......ருதௌ, *......மாஸே, *.......பக்ஷே, *.......சு’பதிதௌ, *........வாஸர யுக்தாயாம், *......நக்ஷத்ரயுக்தாயம் அஸ்யாம் சு’பதிதௌ,

மம ஸகுடும்பஸ்ய க்ஷேம ஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுராரோக்ய ஐச் ’வர்யாணாம் அபிவ்ருத்த்யர்த்தம், புத்ரபௌத்ராபி வ்ருத்த்யர்த்தம் ஸமஸ்த மங்களா வாப்த்யர்த்தம், ராஜத்வாரே. ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம், அனந்த பத்மநாப ப்ரீத்யர்த்தம், அனந்த வ்ரதாரம்பம் அனந்த வ்ரத பூஜாம் கரிஷ்யே ததங்கம் யமுனாபூஜாம், ததங்கம், கலச ’ பூஜாம் ச கரிஷ்யே

(பஞ்சாங்கம் பார்க்கவும்)

விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)

அகஜானன........ உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை கலச ’பூஜை

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

கும்பத்தில் யமுனா பூஜை

தரைமீது அஷ்டதள பத்ம வடிவில் கோலமிட்டு, அதன் மீது அரிசியைப் பரப்பி, அதன்மீது கலசத்தை வைத்து, சந்தனம், புஷ்பம், மாவிலை முதலியவற்றால் அலங்கரித்து, அதன்மீது ஒரு பிடி தர்ப்பத்தால் செய்த கூர்ச்சத்தில், ஆதிசேஷனின் பிரதிமையை வைத்துக் கும்ப பூஜை செய்யவும்.

க்ஷீரோதார்ணவ ஸம்பூதே க்ஷீரவர்ண ஸமப்ரபே
ப்ரஸாதம் குரு மே தேவி யமுனாயை நமோ நம:
யமுனாம் த்யாயாமி (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

விஷ்ணுபாத ஸமுத்பூதே ஸர்வகாம ப்ரதாயினி
ஸர்வ ஸௌபாக்யதே தேவி யமுனாயை நமோஸ்துதே
யமுனாம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஸூர்யபாதாப்ஜ ஸம்பூதே ஸர்வலோக ஹித ப்ரியே
ஸர்வபாப விநிர்முக்தே துங்காயை ச நமோஸ்துதே
யமுனாயை நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

கருடாஸன ஸம்பூதே ஸர்வலக்ஷண ஸம்யுதே
ஸர்வவ்ரதே மஹாதேவி பத்ராயை ச நமோஸ்து தே
யமுனாயை நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

க்ருஷ்ணவேண்யை நமஸ்துப்யம் க்ருணவர்ணே ஸுலக்ஷணே
விஷ்ணுப்ரியே மஹாதேவி பாகீரத்யை நமோ நம:
யமுனாயை நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

நந்திபாதே நமஸ்துப்யம் ச ’ங்கரார்த்த ச ’ரீரிணி
ஸர்வலோகாதிபதே தேவி பாகீரத்யை நமோ நம:
யமுனாயை நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கிரிபாதே நமஸ்துப்யம் ஸர்வலக்ஷண ஸம்யுதே
ஸர்வப்ரதே மஹாதேவி பத்ராயை ச நமோஸ்து தே
யமுனாயை நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தெளிக்கவும்)

ஸிம்ஹபாதே நமஸ்துப்யம் நரஸிம்ஹ ஸமன்விதே
ஸர்வலக்ஷண ஸம்பூர்ணே பவநாசி’னி தே நம:
யமுனாயை நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

தேவானாமுத்தமே தேவி ஸூக்ஷ்மதந்து விநிர்மிதம்
வஸ்த்ரயுக்மம் மயா தத்தம் க்ருஹாண ஸுரபூஜிதே
யமுனாயை நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

கோதாவரி நமஸ்துப்யம் ஸர்வாபீஷ்ட ப்ரதாயினி
ஸர்வபாப விநிர்முக்தே வ்ருத்தகங்கே நமோ நம:
யமுனாயை நம: கஞ்சுகம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

ரத்ன தாடங்க கடக பூஷணானி ரவிப்ரபே
ததாமி தே ரவிஸுதே ஸர்வைச்’வர்ய ப்ரதாயிணி
யமுனாயை நம: ஆபரணானி ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்)

சந்தாநாகரு கர்ப்பூர கோரோசன ஸமன்விதம்
கஸ்தூர்யாதியுதம் தேவி கந்தம் தாஸ்யாமி பக்தித:
யமுனாயை நம: கந்தம் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும்)
கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்)

மந்தார பாரிஜாதாத்யை: கேதகீ பாடலாதிபி:
த்வாம் பூஜயாமி யமுனே வரதே பக்தவத்ஸலே
யமுனாயை நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜை

யமுனாயை        நம:    பாதௌ    பூஜயாமி (கால்)
காளிந்த்யை        நம:    ஜானுநீ    பூஜயாமி (முட்டி)
ஸூர்யதனயாயை    நம:    ஊரூ    பூஜயாமி (தொடை)
ச ’மனஸ்வஸ்ரே        நம:    கடிம்    பூஜயாமி (இடுப்பு)
கங்காயை        நம:    நாபிம்    பூஜயாமி (தொப்புள்)
தரங்கிண்யை        நம:    ஸ்தநௌ    பூஜயாமி (மார்பகம்)
ஹ்லாதின்யை        நம:     புஜான்    பூஜயாமி (புஜம்)
உன்னதகண்ட்யை    நம:    கண்டம்    பூஜயாமி (கழுத்து)
ஸரஸ்வத்யை        நம:    முகம்    பூஜயாமி (முகம்)
த்ரிலோகஜனன்யை    நம:    லலாடம்    பூஜயாமி (நெற்றி)
பீமரத்யை        நம:     சி’ர:    பூஜயாமி (தலை)
யமுனாயை         நம: ஸர்வாண்யங்கானி     பூஜயாமி (முழுவதும்)

உத்தராங்க பூஜை

யமுனாயை நம: தூபம் ஆக்ராபயாமி
(தூபம் காட்டவும்)

யமுனாயை நம: தீபம் தர்ச’யாமி.
(தீபம் காட்டவும்)

ஸர்வபக்ஷயைச்’ச போஜ்யைச் ’ச ரஸை: ஷட்பி: ஸமன்விதம்
நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவி யமுனாயை நமோஸ்துதே
யமுனாயை நம: நைவேத்யம் நிவேதயாமி
(பழம் நிவேதனம் செய்யவும்.)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி.
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தில் தீர்த்தம் விடவும்.)

பஞ்சவர்த்தி ஸமாயுக்தம் ஸர்வமங்கள காரகம்
நீராஜனம் ப்ரதாஸ்யாமி கல்யாணம் குரு மங்களே
கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூரம் காட்டவும்)

மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து, நமஸ்காரம் செய்யவும்)

க்ஷுரோதார்ணவ ஸம்பூதே க்ஷீரார்ணவ நிஷேவிதே
இஹ போகான் வரான் தேஹி பரத்ர ச பராம் கதிம்
என்று பிரார்த்தனை செய்யவும்.

அனந்தா பூஜா

(பதினான்கு) 14 தர்ப்பங்களை இரண்டிண்டாக எடுத்து, நுனியில் முடிச்சுப் போட்டு அவ்வாறு முடிச்சிட்டவைகளை மூன்று காலாகப் பிரித்து ஜடைப் பின்னல்போல் பின்னி, அதைத் தெற்குப்பக்கம் பார்க்கும் தலையாக யமுனையைப் பிரதிஷ்டை செய்த கலசத்தின் மீது வைத்து அந்தத் தர்ப்பங்களில் அனந்த பத்மநாப ஸ்வாமிக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

தியானம்

த்யாயாம்யனந்தம் தேவேச ’ம் பீதவாஸஸ  மச்யுதம்
நவாம்பர பல்லவ நிபம் பிங்கப்ரூ ச்’மச்’ரு லோசனம்
பீதாம்பரதரம் தேவம் ச ’ங்க சக்ர கதாதரம்
விச்’வாகாரம் விச் ’ வயோனிம் விச்’வாதாரம் ஹரிம் பரம்
ஸஹஸ்ர சி’ரஸம் விஷ்ணும் சே ’ஷஸம்ஜ்ஞம் ரமாபதிம்
அலங்க்ருதம் ஸமுத்ரஸ்த்தம் விச்’வரூபம் விபாவயே
அஸ்மின் பிம்பே அனந்தம் த்யாயாமி (புஷ்பம் அக்ஷதைகளைப் போடவும்)

ஆவாஹனம்

ஆகச்சானந்த தேவேச ’தேஜோராசே ’ ஜகத்பதே
இமாம் மயா க்ருதாம் பூஜாம் க்ருஹாண புருஷோத்தம
அஸ்மின் பிம்பே அனந்தம் ஆவாஹயாமி (புஷ்பம் அக்ஷதை போடவும்)

ப்ராணப்ரதிஷ்டை

(பக்கம் 41 பக்கம் முதல் பக்கம் 48ம் பக்கம் வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

விஷ்டரோயம விசித்ராத்மன் கோவர்த்தனதர ப்ரபோ
அனந்த தீயதே தஸ்மின் ரத்ன ஸிம்ஹாஸனே விச ’
அனந்தாய நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை போடவும்)

யதா த்வம் ஸர்வதேவானாம் இந்த்ராதீனாம் ச ரக்ஷக:
ததா மாம் பாலயானந்த த்வதங்க்ரி ச ’ரணாகதம்
அனந்தாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

அனந்தானந்த தேவேச ’ அனந்த பல தாயக
அனந்தானந்த ரூபோஸி க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே
அனந்தாய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கங்கோதகம் மயாநீதம் ஸுவர்ண கலச ’ஸத்திதம்
ஆசம்யதாம் ஹ்ருஷீகேச ’ ப்ரஸீத புருஷோத்தம
அனந்தாய நம: ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

ததிக்ஷீரம் க்ருதம் சைவ ச ’ர்க்கரா மதுஸம்யுதம்
துஷ்ட்யர்த்தம் தேவதேவேச ’ மதுபர்க்கம் ததாமிதே
அனந்தாய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தொட்டு தெளிக்கவும்)

கங்காதிப்ய: ஸமானீதம் சீ’ தலம் விமலம் ஜலம்
ஸ்னானார்த்தம் க்ருஹ்யதாம் தேவ ஸர்ப்பராஜ நமோஸ்து தே
அனந்தாய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

தப்த காஞ்சன ஸங்காச ’ம் பீதாம்பரயுகம்  சு ’பம்
க்ருஹாண தேவதேவேச ’ லக்ஷ்மீநாத நமோஸ்து தே
அனந்தாய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ப்ரஹ்மஸூத்ரமிதம் சு’ப்ரம் க்ருஹாண புருஷோத்தம
தாமோதர நமஸ்தேஸ்து த்ராஹி மாம் பவஸாகராத்
அனந்தாய நம: உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

கந்தம் குங்கும ஸம்யுக்தம் கஸ்தூர்யாதி ஸமன்விதம்
க்ருஹாணானந்த தேவேச ’ குணரத்ன மஹார்ணவ
அனந்தாய நம: கந்தான் தாரயாமி
கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும், குங்குமமிடவும்.)

மல்லீ சம்பக புந்நாக மாலத்யாதீனி ச ப்ரபோ
மயா (ஆ)ஹ்ருதானி புஷ்பாணி ஸ்வீகுருஷ்வ ஸதார்ச்சித
அனந்தாய நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் போடவும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 9. அனந்த விரதம் »

அனந்த விரதம் அக்டோபர் 31,2018

இந்த விரதத்தைப் பற்றி பகவான் கண்ணனே பாண்டவர்களுக்குச் சொன்னது. “அனந்த விரதம் என்பது எல்லாப் ... மேலும்
 

அங்க பூஜை அக்டோபர் 31,2018

(ஒவ்வொரு நாமாவை சொல்லி புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்.)அனந்தாய        நம: பாதௌ        பூஜயாமி ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar