பதிவு செய்த நாள்
01
நவ
2018
10:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ., 8 முதல் 14 வரை கந்த சஷ்டி திருவிழா நடக்கிறது. நவ., 8 அனுக்ஞை பூஜையை தொடர்ந்து மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பகவிநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு பூஜை முடிந்து, யாகசாலை பூஜை துவங்கும்.
உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, அடுத்து ஆறு முகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டப்படும். பின் விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள் பாலிப்பார். தினமும் காலை யாகசாலை பூஜைகள், காலை, மாலையில் சண்முகார்ச்சனை நடக்கும். சூரசம்ஹாரம்: நவ., 12 வேல் வாங்குதல், 13 சூரசம்ஹாரம், 14 காலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மன் சட்டத்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கும். தொடர்ந்து மூலவர் முன் தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும்.