பதிவு செய்த நாள்
01
நவ
2018
12:11
தர்மபுரி: ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி, தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது, வழக்கம். ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று (அக்., 31ல்), ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திகடன் செலுத்தி, கோவிலை, 18 முறை வலம் வந்து வழிபட்டனர். முன்னதாக காலை, 6:00 மணிக்கு. கால பைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருத்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன.
தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு விபூதிகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சண காசி காலபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது.