தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. வடை மாலை சாத்துதல், சொர்ணபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மிளகு, தேங்காய், எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.