Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நவக்ரஹ பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 15. லக்ஷ்மீ குபேர பூஜை
தனாகர்ஷண லக்ஷ்மீ குபேர பூஜை செய்யும் முறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

பூஜை செய்யும் முறை

* ஐப்பசி மாதம் வருகிற அமாவாஸ்யை அன்று இப்பூஜை செய்வது உத்தமம்.

* அம்பிகைக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை, அல்லது ஏதாவதொரு சுபநாளில், சுபநக்ஷத்திரத்தில், சுபதிதியில், சுபயோகத்தில், சுபகரணத்தில் செய்ய வேண்டும்.

* நல்லதொரு மேடை அமைத்து, அதில் மனையை வைக்க வேண்டும்.

*அதன் மேல் பட்டு விரிப்புப் போட்டு அதன் மேல் வாழையிலை வைக்க வேண்டும்.

* அதன் மீது அக்ஷதை பரப்ப வேண்டும்.

* அதன்மீது கிழக்கு முகமாக தனாகர்ஷண ஸ்ரீலக்ஷ்மீ குபேர யந்த்ரத்தை வைக்க வேண்டும்.

* யந்திரத்தில் சந்தனம் இட்டு குங்குமம் இட்டு, புஷ்பமாலை சார்த்தி, அலங்கரித்து மற்ற குறிப்பிட்ட பூஜைத் திரவியங்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* கலசத்தில் நீர் நிரப்பி, மாவிலைக்கொத்து வைத்து, மலர் சார்த்தி, சந்தனமிட்டு, அக்ஷதை சேர்த்து, கலசத்தை யந்த்ரத்தின் வலது பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும்.

* நவக்ரஹங்களை ஆவாஹனம் செய்வதற்குரிய தானியக் கிண்ணங்களையும், யந்த்ரத்தின் பக்கத்திலேயே வைத்துக் கொள்ளவும்.

* பிறகு, நித்யாநுஷ்ட்டானங்களை முடித்துக் கொண்டு, காலையில் இந்தப் பூஜையைச் செய்ய வேண்டும்.

*முதலில் மஞ்சள் பிள்ளையாருக்கும், பிறகு லக்ஷ்மீ குபரேர்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.

முக்கிய குறிப்பு

இந்த ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ லக்ஷ்மீ குபேர பூஜையைத் தினசரி செய்து வருவது மிகவும் நல்லது.

அப்படிச் செய்கிறவர்கள், லோக பாலகர்கள், நவக்ரஹாதி தேவதைகளை யதாஸ்த்தானம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.

பொதுவாக இவர்களை யதாஸ்த்தானத்தில எழுந்தருள பண்ணவேண்டும். அதற்கான “யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி ” என்று வரும் இடங்களில், அதை மட்டும் விட்டு, மற்ற மந்த்ரங்களைச் சொல்ல வேண்டும்.

“குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூஜையைச் செய்கிறவர்கள், இப்பூஜை முறையில் குறிப்பிட்டது போல் ‘யதாஸ்த்தானம் ’ செய்து, த்யான ஆவாஹநாதி பூஜை முறைகளைச் செய்ய வேண்டும். மேலும், ஏதாவதொரு காரணத்தால் பூஜை செய்வதில் தடை ஏற்பட்டுவிட்டால், மானஸீகமாகப் பூஜாதிகளைச் செய்ய வேண்டும். ஆனால், இம்முறையை எப்பொழுதும் பின்பற்றக் கூடாது.

இந்தப் பூஜையைச் செய்யத் தொடங்கும் போது அவ்வப்போது மாறிவரும், வருஷம், மாஸம், அயனம், ருது, வாஸரம், நக்ஷத்திரம், திதி, இவைகளைப் பஞ்சாங்கத்தில் பார்த்துத் தெரிந்து, சொல்லிக் கொள்ளவும்.”

இந்த பூஜைக்கு வேண்டிய விசேஷ பொருட்கள்

1.) ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீலக்ஷ்மீ குபேர யந்த்ரம், 2.) பட்டு விரிப்பு, 3.) நவதானியங்கள் (கோதுமை, அரிசி, துவரை, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, மொச்சை, எள்ளு, உளுந்து, கொள்ளு முதலியன.) 4.) இவைகளை தனித் தனியாக வைக்கக் கிண்ணம்.

ஸ்ரீலக்ஷ்மீ குபேர பூஜை

1. பூஜைக்கு வேண்டிய பொருட்கள் பட்டியல் பக்கம் 6ம் முதல் பக்கம் 7 வரை பார்க்கவும். இத்துடன் கூர்ச்சம் தயாரித்துக் கொள்ளவும்.

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நைவேத்ய பொருட்கள்: சாதம், சர்க்கரைப் பொங்கல், பாயஸம், வடை, நெய் அப்பம், சுண்டல், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

(ஸங்கல்பம் செய்வதற்கு முன்னால் அவ்வப்பொழுது மாறிவரும் திதி, வருஷம், மாதம், நக்ஷத்திரம், இவைகளை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து, அதற்கேற்ப சொல்லிக் கொள்ளவும்.

யார் பெயரில் பூஜை செய்யப்படுகிறதோ அவர் ஆணாக இருந்தால் ‘ஜாதஸ்ய ’ என்றும், பெண்ணாக இருந்தால் ‘ஜாதாயா:’ என்றும் சொல்லவும்.

மற்றவருக்காக பூஜை செய்யும் பட்சத்தில் ஆணுக்கு ‘அஸ்ய ’ என்றும், பெண்ணுக்கு ‘அஸ்யா: ’ என்றும், தனக்காகவே செய்வதாய் இருந்தால் ‘மம ’ என்றும், சொல்லிக் கொள்ளவும்.)

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம், சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரம்ஹண:, த்விதீய பரார்த்தே, ச் ’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *...நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்), (உத்தர/தக்ஷிண) அயனே *.......ருதௌ (பருவத்தின் பெயர்), *....மாஸே (மாதத்தின் பெயர்),(சுக்ல /கிருஷ்ண) பக்ஷே, *... திதௌ (திதியின் பெயர்), *..... வாஸர யுக்தாயாம் (கிழமையின் பெயர்), *..... நக்ஷத்ரயுக்தாயாம் (நக்ஷத்திரத்தின் பெயர்), சுபயோக, சுபகரண, ஸகல விசேஷண விசிஷ்டாயாம், அஸ்யாம் *.... சுப திதௌ,

மம (அஸ்ய யஜமானஸ்ய) ஸஹகுடும்பானாம் க்ஷேம ஸ்தைர்ய, வீர்ய விஜய  ஆயுராரோக்ய  ஐச்’ வர்யாபிவ்ருத்யர்த்தம், சதுர்வித புருஷார்த்த ஸித்யர்த்தம், ஸமஸ்த மங்களாவாப்த்யர்த்தம், *... நக்ஷத்ரே (பூஜை செய்பவரின் நக்ஷத்திரம்), *....ராசௌ (பூஜை செய்பவரின் ராசி), ஜாதஸ்ய /ஜாதாயா:, அஸ்ய /அஸ்யா:, ஸர்வ ஆபந் நிவ்ருத்யர்த்தம், (எல்லா ஆபத்துக்களும் நீங்க), வ்யாதி நாசபூர்வகம், க்ஷிப்ராரோக்யாவாப்த்யர்த்தம் (வியாதி நீங்கி, ஆரோக்கியம் அடைய), அபம்ருத்ய  பரிஹாரபூர்வகம், ஆயுரபிவ்ருத்யர்த்தம் (தீர்க்க ஆயுள் அடைய), ஸர்வ வசீகரணார்த்தம் (அனைவரும் தன்வசம் ஆக), க்ரஹபீடா நிவாரணார்த்தம் (நவக்கிரஹ தோஷம் தீர), பூத ப்ரேத  பிசாசோப த்ரவாதி ஸர்வாரிஷ்ட நிவாரணார்த்தம் (பூதம், பிசாக ஆகியவற்றின் உபத்திரவம் நீங்க), ஸகலைச்’வர்ய ஸித்தி த்வாரா குலதேவதா  ப்ரஸாத ஸித்யர்த்தம் (எல்லா ஐஸ்வரியங்களும் அடைந்து, குலதேவதையின் அனுக்ரஹம் அடைய) சீ ’க்ரமேவ ஸுவிவாஹ ஸித்யர்த்தம் (சீக்கிரம் விவாஹம் ஆக)

(மேல்கண்டவைகளில் என்ன பலனை உத்தேசித்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பலனுக்கு உண்டான வாக்கியத்தை மாத்திரம் சங்கல்பத்தில் சேர்த்துக் கொள்ளவும்.)

ஸ்ரீ லக்ஷ்மீ ஸஹதி ஸ்ரீகுபேர பூஜாம் கரிஷ்யே. ததங்கம் மாத்ருகண பூஜாம், நவக்ரஹ பூஜாம், லோகபால பூஜாம் ச கரிஷ்யே, ததங்கம் கலச ’ பூஜாம் ச கரிஷ்யே.

(அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும்.)

பஞ்சாங்கம் பார்க்கவும்

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன பத்மார்க்கம் கஜானனம் அஹர்நிஷம்
அனேகதந்தம் பக்தானாம் ஏகதம்தம் உபாஸ்மஹே

அஸ்மாத் ஹரித்ராபிம்பாத் விக்னேச்’வரம்
யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி

சோ ’ பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச
(மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை ஸமர்ப்பித்து வடக்கு பக்கம் நகர்த்த வேண்டும்.)

விக்னேச் ’வர ப்ரஸாதம் சி’ரஸா க்ருஹ்ணாமி
(பூஜை செய்த புஷ்பத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு தலையில் வைத்துக் கொள்ளவும்.)

அப உபஸ்ப்ருச்’ய
தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக்கொள்ள வேண்டும்.

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ஷோடஷ மாத்ருகண பூஜை

(லக்ஷ்மீ குபேர மந்திரத்தை /படத்தை  கலசத்தின் முன்னால் வைத்து அதற்கு பூஜை செய்யவும். ‘நம: ’ என்று சொன்ன பிறகு அக்ஷதை புஷ்பம் போட்டுக் கொண்டு வரவும்.

ஓம்    கௌர்யை        நம:
ஓம்    பத்மாயை        நம:
ஓம்     ச ’ச்யை        நம:
ஓம்    மேதாயை        நம:
ஓம்    ஸாவித்ர்யை        நம:
ஓம்    விஜயாயை        நம:
ஓம்    ஜயாயை        நம:
ஓம்    தேவஸேநாயை        நம:
ஓம்    ஸ்வதாயை        நம:
ஓம்    ஸ்வாஹாயை        நம:
ஓம்    மாத்ருப்யோ        நம:
ஓம்    லோகமாத்ருப்யோ    நம:
ஓம்    த்ருத்யை        நம:
ஓம்    புஷ்ட்யை        நம:
ஓம்    துஷ்ட்யை        நம:
ஓம்    ஆத்ம தேவ்யை        நம:

ஷோடஷ மாத்ருப்யோ நம: த்யாயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ஷோடஷ மாத்ருப்யோ நம: ஆவாஹயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ஷோடஷ மாத்ருப்யோ நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(அக்ஷதை புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(சிறிது ஜலம் கிண்ணத்தில் விடவும்)

பாத்யம் ஸமர்ப்பயாமி
(சிறிது ஜலம் கிண்ணத்தில் விடவும்)

ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(சிறிது ஜலம் கிண்ணத்தில் விடவும்)

ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் சிறிது ஜலம் தெளிக்கவும்)

ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(சிறிது ஜலம் கிண்ணத்தில் விடவும்)

ஏதே வஸ்த்ர உத்தரீய  கந்த  புஷ்ப தூப
தீபாதி ஸகலோபசாரார்த்தே அக்ஷதா:
(அக்ஷதை போடவும்.)

ஷோடச ’மாத்ருப்யோ நம: கதலீபலம் நிவேதயாமி
(என்று வாழைப்பழத்தை நிவேதனம் செய்யவும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 15. லக்ஷ்மீ குபேர பூஜை »

நவக்ரஹ பூஜை நவம்பர் 01,2018

நவக்ரஹ மண்டலம் அமைத்து, அதில் புஷ்பம் அக்ஷதைகளை போட்டு பூஜை செய்யவும்.மண்டலம் அமைக்கும் ... மேலும்
 
(‘நம:’ என்று சொல்லி முடித்ததும், குங்குமத்தாலோ, புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யவும்.)ஓம் சபலாயை       ... மேலும்
 
(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)ஓம் ... மேலும்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை, கமல தாரிண்யை,தனாகர்ஷிண்யை ஸ்வாஹா(இதை தினமும் 108 தடவை ஜபித்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar