பதிவு செய்த நாள்
02
நவ
2018
11:11
திருப்பதி: திருமலையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த, தேவஸ்தான நிர்வாகம், நேற்று முதல் தடை விதித்துள்ளது. திருமலை, ஏழுமலையான் கோவிலில், சுற்றுசூழல் மாசை கட்டுப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று முதல், திருமலையில் பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் பயன்படுத்த, தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. தடையை மீறி, பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தும் கடைகள், வணிக நிறுவனங்களுக்கு, 5,000 - 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேலும், திருமலைக்கு வரும் பக்தர்களும், பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. லட்டு கவருக்கு மாற்று ஏற்பாடு செய்யும் வரை, அதை மட்டும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம், தேவஸ்தான நிர்வாகம் விற்று வருகிறது. இதன்படி, கடந்த மாதம் நடந்த ஏலத்தில், 3,300 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 6.06 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.