உத்தரகோசமங்கை முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2018 11:11
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை தெற்குத் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் அக்.,21ல் காப்பு கட்டுதலுடன் முளைப்பாரி விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகளும், இரவில் கோலாட்டம், கும்மி, ஒயிலாட்டம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் முன்பு முளைப்பாரிகள் இறக்கப்பட்டு, உலக நன்மைக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் அம்மன் பாடல்களைப் பாடினர். பின்னர் சீதைப்புனல் ஊரணியில் முளைப்பாரிகள் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.