Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழாவை ... தீபாவளி மறுநாள் அமாவாசை: நோன்பு கயிறுகள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் தீபாவளி மறுநாள் அமாவாசை: நோன்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாயமான தமிழக பொக்கிஷம்
எழுத்தின் அளவு:
மாயமான தமிழக பொக்கிஷம்

பதிவு செய்த நாள்

06 நவ
2018
02:11

நாகப்பட்டினம், :நாகை, திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மரகதலிங்கம் மாயமாகி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், துப்பு எதுவும் கிடைக்காததால், நாகை போலீசார் திணறி  வருகின்றனர்.

நாகை மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பிரம்மபுரீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. போரில்  வெற்றிஇந்திரனை துன்புறுத்திய அசுரர்களை, முசுகுந்த சக்கரவர்த்தி போரிட்டு வென்றால், தம்மிடம் இருக்கும் மரகதலிங்கத்தை தருவதாக, இந்திரன் கூறியதால், அசுரர்களை முசுகுந்த சக்கரவர்த்தி  போரில் வென்றார்.இதையடுத்து, தம்மிடம் இருந்த அரிய மரகதலிங்கத்தை தர மனமில்லாத இந்திரன், தேவசிற்பியான மயனை வரவழைத்து, தன்னிடம் இருந்த மரகதலிங்கம் போல் ஆறு வித  மரகதலிங்கத்தை உருவாக்கி, அதில் உண்மையான மரகதலிங்கத்தை எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்தனிடம் கூறினார். இறைவனை வேண்டி சரியான மரகதலிங்கத்தை முசுகுந்தன் எடுத்ததால்,  இறைவனின் திருவிளையாடலை உணர்ந்த இந்திரன், ஏழு வித லிங்கங்களையும் அவரிடமே கொடுத்தார்.ஏழு இடங்கள்திருவாரூர், திருநள்ளார், திருக்குவளை, திருவாய்மூர், நாகை, வேதாரண்யம்,  திருக்கரவாசல் ஆகிய ஏழு இடங்களில் பிரதிஷ்டை செய்து முசுகுந்தன் வழிபட்டார். இவ்விடங்கள் சப்தவிடங்கள் என்றழைக்கப்படுகிறது.நாகை நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்த கோமேதக  லிங்கம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வர் கோவில், திருக்காரவாசல் கோவில்களில் இருந்த மரகதலிங்கங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் மாயமாகியுள்ளன. இவை, 15 ஆண்டு களுக்கு முன்,  மாயமானவை. இன்னும் போலீசாரால் மீட்கப்படாமல் உள்ளன.இந்நிலையில், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அவனி விடங்கர் என்றழைக்கப்பட்ட மரகதலிங்கம், 2016 அக்டோபர் மாதம்  மாயமானது. இந்த மரகதலிங்கம், 1983ல் தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.அரிய பொக்கிஷமான இதுபோன்ற லிங்கங்களை, சர்வதேச கொள்ளை கும்பலே குறி வைத்து, உள்ளூர்  சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்து, கொள்ளையடித்து வருவதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எதிர்பார்ப்புகொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடியப்  போதும், எவ்வித துப்பும் கிடைக்காமல், இரண்டு ஆண்டுகளாக நாகை போலீசார் திணறி வருகின்றனர். எனவே சிலை கடத்தல் தடுப்பு, ஐ.ஜி.,பொன் மாணிக்கவேல் இவ்வழக்குகளில் தனி கவனம்  செலுத்த வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar