Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர், பழநி முருகன் ... காணக்கிடைக்காத சுவாமி சிலைகள் உத்தரகோசமங்கையில் தரிசிக்கலாம் காணக்கிடைக்காத சுவாமி சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசற்படி கற்களான வரலாற்று சின்னங்கள்
எழுத்தின் அளவு:
வாசற்படி கற்களான வரலாற்று சின்னங்கள்

பதிவு செய்த நாள்

07 நவ
2018
11:11

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கொங்கு வட்டாரத்தின் வரலாற்று தொன்மைக்கு சான்றாக எஞ்சியிருக்கும் நடுகற்கள், விழிப்புணர்வு இல்லாமல் அழியும் அபாயத்ததில் உள்ளன.

சேர, சோழ, பாண்டிய தேசங்களின் எல்லைப்பகுதியாக பொள்ளாச்சி இருந்துள்ளது. சோழர் ஆட்சிக்காலத்தில், கட்டப்பட்டது தான், இன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலாக உள்ள சிவன் கோவில் எனவும் கூறப்படுகிறது.அதன் பின் வந்த விஜயநகர ஆட்சி, திப்பு சுல்தான் ஆட்சி, நாயக்க மன்னர்கள் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சியின் போதான ஜமீன்தார்கள் காலம் என பொள்ளாச்சி வரலாற்று பின்னணி கொண்ட பகுதியாகும்.இதற்கு ஆதாரமாக, சில கோவில்கள் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால், ஊருக்கு ஊர் பல்வேறு வராலாற்று ஆதாரங்கள் உள்ளன என்பதே உண்மை. நுாற்றுக்கணக்கான நடுகற்கள், புலிகுத்தி கற்கள் பொள்ளாச்சியை சுற்றியுள்ள கிராமங்கள் எங்கும் உள்ளன.ஆனால், அவற்றின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், பாதுகாக்க தவறி விட்டனர். சில ஊர்களின் மட்டும், நடுகற்களை பல்வேறு பெயர்களில் கடவுளாக வழிபடுவதால், அவை பாதுகாக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஆர்.பொன்னாபுரத்தில் உள்ள நடுகல், செட்டி விநாயகர் கோவில் என மக்களால் வழிபடப்படுகிறது. கள்ளிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பராமரிப்பின்றி கிடந்த நடுகல், கடந்த சில காலமாக பள்ளி ஆசிரியர்களால் பராமரிக்கப்பட்டு, உடையப்பர், உடையம்மா என கடவுள்களாக கருதி வழிபட்டு வருகின்றனர்.வடுகபாளையம் ஆலமரத்தம்மன் கோவில் அருகே பராமரிப்பின்றி கிடந்த நடுகல்லை, இளைஞர்கள் பாதுகாத்து பராமரித்து, வேட்டைக்கார அப்பச்சி என வழிபட துவங்கியுள்ளனர். ஆனால், பாதுகாப்படும் நடுகற்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் தான். பராமரிப்பின்றி விடப்பட்டு, வீடுகளில் துவைக்கும் கற்களாகவும், வாசற்படி கற்களாகவும் மாறி சிதைந்து அழிந்தவைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.இதனால், நடுகற்களின் பின்னணியில் உள்ள தொன்மை மற்றும் வரலாற்று தகவல்கள் யாருக்கும் தெரியாமலேயே அழிந்து விடுகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறை, பொள்ளாச்சி பகுதியின் தொன்மை சின்னங்களை ஆய்வு நடத்தி, பாதுகாக்க வேண்டும். அவற்றின் பின்னணியில் உள்ள வரலாற்று செய்திகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar