Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆறுபடையா... ஆற்றுப்படையா! திருச்செந்துார் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் துவக்கம் திருச்செந்துார் கந்த சஷ்டி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் கண்ணாடிக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் கண்ணாடிக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 நவ
2018
06:11

திருச்செந்துாரில் உற்ஸவரான ஜெயந்திநாதர் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்த்தியபின் பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அதில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால் நிழல் என்பது பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

கடலில் கங்கை பூஜை :  தினமும் முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் புறப்பட்டு கடலில் கரைக்கின்றனர். இதனை கங்கை பூஜை என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறுகுழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் வீற்றிருக்கும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சந்தனக் காட்டுக்குள்ளே...: திருச்செந்துார் பகுதியினர் பாடும் நாடோடிப்பாடல்களில் சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன் என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் கோயில் உள்ள பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயருண்டு. திருப்புகழில், சந்தனப் பைம்பொழில் தண் செந்தில் என்று சந்தன சோலையாக திருச்செந்துார் இருப்பதை 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது சந்தனமரம் அங்கில்லை. பக்தர்களுக்கு சந்தனம், விபூதி பிரசாத தருகின்றனர்.


ஒன்றல்ல... இரண்டு : குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என பெயரிடுகிறார்கள். கச்சியப்பர் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி போற்றி!" என்று முருகனின் வேலினைப் போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் போல வேலுக்கும் ஆறுமுகங்கள் உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar