Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை பிரம்மோற்சவ விழா நிறைவு சித்திவிநாயகர் கோவில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் காணிக்கை முடிக்கு மறு ஏலம்: ரூ.31 லட்சம் கூடுதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2012
11:02

செஞ்சி : மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த முடி சேகரிப்பு மறு ஏலத்தில், கடந்த ஏலத்தை விட 31 லட்சம் ரூபாய் அதிகரித்து 70 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடியை சேகரிப்பதற்கு ஒரு ஆண்டுக்கான டெண்டர் கடந்த மாதம் 11ம் தேதி நடந்தது. இதில் பச்சையப்பன் என்பவருக்கு 39 லட்சம் ரூபாய்க்கு ஏலம் முடிவானது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பரமசிவம் என்பவர், தான் கேட்ட 47 லட்சம் ரூபாய் ஏலத்தொகையை விட குறைவாக ஏலம் கேட்டவருக்கு ஏலத்தை ஒதுக்கியதாக இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் புகார் செய்தார். அத்துடன் மறு ஏலம் நடத்த கோரி 47 லட்சம் ரூபாய்க்கான டி.டி.,யையும் உடன் இணைத்திருந்தார். இதையடுத்து ஆணையரின் உத்தரவுப்படி மேல்மலையனூர் கோவில் வளாகத்தில் நேற்று மறுஏலம் நடந்தது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக 50 லட்சம் ரூபாய் முடிவு செய்திருந்தனர். இரண்டு மணிக்கு என அறிவித்திருந்த ஏலத்தை பகல் 3.20 மணிக்கு துவங்கினர்.
விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் குமரதுரை ஏலத்தை நடத்தினார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜோதி, ஆய்வாளர் முருகேசன் உடனிருந்தனர்.

அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள் டெண்டரில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். முதலில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் டிபாசிட் தொகையாக ஒரு லட்சம் ரூபாயை கட்டியிருந்த நான்கு பேர் ஏலம் கேட்டனர். பரமசிவம் என்பவர் 50 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் கேட்டார். இதையடுத்து மூடி சீல் வைக்கப்பட்டிருந்த டெண் டர் பெட்டியை திறந்தனர். இதில் நான்கு டெண்டர்கள் இருந்தன. ஒன்றில் டிபாசிட் தொகைக்கான டி.டி., இல்லை. மற்ற மூன்றில் சந்திரன் 57 லட்சத்திற்கும், ஏழுமலை 55 லட்சத்திற்கும், சரவணன் 70 லட்சத்திற்கும் டெண்டர் கோரியிருந்தனர். அதிக தொகை கோரியிருந்த சரவணனுக்கு டெண்டரை ஒதுக்கீடு செய்வதாக, உதவி ஆணையர் குமரதுரை அறிவித்தார். இதில் சரவணனின் டெண்டரில் எழுத்தால் எழுபது லட்சம் என எழுத வில்லை என்பதால் டெண்டரை நிராகரிக்க வேண்டும் என ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டனர். இதனை அதிகாரிகள் ஏற்கவில்லை. கடந்த மாதம் நடந்த ஏலத்தை விட தற்போது நடந்த மறு ஏலத்தில் 31 லட்சம் ரூபாய் அதிகமாக ஏலம் போய் உள்ளது. கடந்தாண்டு நடந்த ஏலத்தில் 39 லட்சத்திற்கு மட்டுமே ஏலம் போனது என்பது குறிப்பட தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar