மதுரை: மதுரை கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு விழா நவ.,25 காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 11:55 மணிக்கு சந்தனக்கூடு மின் அலங்காரத்துடன் துவங்குகிறது. நவ.,26 ல் இரவு 9:00 மணிக்கு திருச்சி கென்னடி கச்சேரி, நவ.,27 ல் இரவு 9:00 மணிக்கு பெங்களூரு ரஜியா சுல்தானா, பெல்காம் முகமத் அலி சாதிக், மும்பை சாபிரா பானு இன்னிசை கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் பாஷல்பாஷா, பாபுஜான், சுல்தான் பாட்ஷா, தாஜூதீன், பாபு செய்கின்றனர்.