சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2018 03:11
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வஜ்ரஅங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடந்தது. மூலவர் பெருமாள் வஜ்ர அங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்திலும், காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையிலும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.