பதிவு செய்த நாள்
08
நவ
2018
03:11
பழநி: பழநி மலைக்கோவிலில், காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் துவாரபாலகருக்கு காப்புக் கட்டப்பட்டது.
பழநி கோவிலில், நவ.,08ம்தேதி முதல், 13ம்தேதி வரை, கந்தசஷ்டி விழா நடக்கிறது. இதையடுத்து, பகல், 12:00 மணிக்கு, உச்சிகால வேளையில், மூலவர் ஞானதண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமாரசுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புகட்டுதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, காப்பு கட்டி விரதம் துவங்கினர். அலங்காரத்தில் சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.