பதிவு செய்த நாள்
08
நவ
2018
05:11
திருச்சி: வயலூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, முத்துக்குமார ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார ஸ்வாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று (நவ.,8ம் தேதி) முதல் 14.11.2018 வரை கந்தசஷ்டி பெருவிழா நடைபெறுகிறது.
முதல் திருநாள்: 08.11.2018, வியாழக்கிழமை
காலை 7.00 மணி : கணபதி ஹோமம், அபிஷேகம்
காலை 9.00 மணி : அருள்மிகு முத்துகுமாரசுவாமிக்கு இலட்சார்ச்சனை
பகல் 12.00 மணிக்கு : சண்முகார்ச்சனை.
மாலை 6.00 மணி : ரக்ஷாபந்தனம் (காப்பு கட்டுதல்), அபிஷேக ஆராதனை.
இரவு 8.00 மணி : அருள்மிகு சிங்காரவேலவர் பச்சைமயில் வாகனத்தில் திருவீதி உலா
ஆறாம் திருநாள்: 13.11.2018, செவ்வாய்க்கிழமை
காலை 9.00 மணிக்கு: சண்முகார்ச்சனை
காலை 10.45 மணியளவில் : சக்திவேல் வாங்குதல்
இரவு 7.30 மணிக்கு : அருள்மிகு சிங்காரவேலவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி காட்சியளித்தல்.
ஏழாம் திருநாள்: 14.11.2018, புதன்கிழமை
காலை 9.00 மணி : அபிஷேகம், ஆராதனை, சண்முகார்ச்சனை
இரவு 7.00 மணியளவில்: அருள்மிகு தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருக்கல்யாணம்