பதிவு செய்த நாள்
09
நவ
2018
12:11
வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்) நடைபெற்றது.ஸ்ரீபெரும்புதூர் அருகே, வல்லக்கோட்டை கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்)நடைபெற்றது.
மூலவருக்கு, மூன்று கால மஹா அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவர், மஞ்சள் சாற்று அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, முருகப் பெருமானை வழிபட்டனர்.வரும், 13ல், சூரசம்ஹாரமும், 14ம் தேதி, தெய்வானை திருக் கல்யாணமும் நடைபெற உள்ளது.இதே போல், செங்கல்பட்டு காட்டுநாயக்கன் தெருவில், செம்மலை வேல்முருகன் கோவிலில், 28ம் ஆண்டு கந்த சஷ்டி விழா, நேற்று (நவம்., 8ல்) முதல் துவங்கியுள்ளது. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலிலும், கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது.