பதிவு செய்த நாள்
09
நவ
2018
12:11
வால்பாறை:வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா நேற்று (நவம்., 8ல்) காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் கந்தசஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்று. கோவிலில் ஆறாம் ஆண்டு கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று (நவம்., 8ல்) காலை, 7:00 மணிக்கு, யாகசாலை பூஜை நடந்தது.
அதைத் தொடர்ந்து காலை, 8:00 மணிக்கு வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், மகா தீபாரதணை நடந்தது.காலை, 10:30 மணிக்கு, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு தலைமையில் திருக்கொடி ஏற்றப்பட்டது. வரும், 13ம் தேதி சூரச்சம்ஹார விழாவும், 14ம் தேதி மாலை முருகன், வள்ளி, தெய்வாணை க்கு திருக்கல்யாணமும் நடக்கிறது.வரும், 15ம் தேதி வரை நடைபெறும் விழாவில் நாள் தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை, கந்தசஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.