கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டிப் பெருவிழா துவங்கியது.இதையொட்டி, நேற்று (நவம்., 8ல்) காலை 10 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு,சகஸ்ரநாம அர்ச்சனையும் அதனைத்தொடர்ந்து சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது.பின்னர் வீரவாகுத் தேவர்கள் காப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.கந்த சஷ்டியையொட்டி தினமும் காலை,மாலைகளில் அர்ச்சனையும்,சுவாமி வீதியுலாவும், கந்தபுராணம் வாசிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.வரும் 13ம் தேதி கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது. அடுத்த நாள் 14ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.