Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சந்தோஷி மாதா பூஜை (பகுதி – 2) சந்தோஷி மாதா பூஜை (பகுதி – 4)
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 35. சந்தோஷி மாதா பூஜை
சந்தோஷி மாதா பூஜை (பகுதி – 3)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
06:11

சுனீதி பெருமகிழ்ச்சியோடு மனநிறைவோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். போலாநாத்தும் பெரு மகிழ்ச்சியோடு தன் வீடு வந்தான். வெளிதேசம் சென்று பெரும் பொருள் தேடிவந்ததைச் சிறப்பித்து, அரசன் அவனுக்கு ரத்தின மோதிரத்தைப் பரிசாக கொடுத்திருந்தான்.

சுனீதி மைத்துனன்மார் குழந்தைகள் விரதத்தைப் பங்கம் செய்ததைப் பற்றிக் கூறினாள். சுனீதியின் யோசனைப்படி அடுத்த வெள்ளிக்கிழமை ஸந்தோஷி மாதா விரதத்தைப் பூர்த்தி செய்யும் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது என அவர்கள் முடிவு செய்தார்கள்.

வெள்ளிக்கிழமை வந்தது. விருந்துக்கு எந்தப் பிள்ளைகளை அழைப்பது என்று சுனீதி சிந்தித்தாள். குற்றத்தையே பெரிதாகக் கருதக்கூடாது. மைத்துனர் பிள்ளைகளையே அழைப்போம். முதலில் வந்து விரதத்தைப் பங்கம் செய்த அவர்களையே மகா உத்தமியான சுனீதி கூப்பிட்டாள். இந்த முறையும் புளிப்புப் பண்டங்களைக் கேட்குமாறும் அவளது தட்சிணைக்குப் பணம் பெற்றுப் புளியம்பழம் வாங்கி வந்து உத்யாபணம் நடக்கும் இடத்திலேயே சாப்பிடுமாறும் அந்தப் பையன்களிடம் தாயார்கள் சொல்லி அனுப்பினார்கள்.

வந்த பையன்கள் ஸந்தோஷிமாதாவின் அருளால் முதலிலேயே புளிப்புப்பண்டம் கேட்டார்கள். சுனீதி சினம் கொண்டாள் “தீயாரைக் காண்பதும் தீது” என்பது பெரியோர் வாக்கு. அப்படி இருந்தும் உறவினர் என அழைத்தோம். அவர்கள் குணத்தைக் காட்டி விட்டார்களே என்று எண்ணிய சுனீதி இங்குப் புளிப்புப்பண்டம் ஏதும் இல்லை விரும்பினால் இனிப்பைச் சாப்பிடுங்கள், இல்லையேல் போங்கள்; என்று கடிந்து கொண்டாள். அவர்கள் போய்விட்டார்கள். பிறகு பக்கத்து வீடுகளில் உள்ள பிள்ளைகளில் எட்டுப் பேரை அழைத்து வந்து சுனீதி, அவர்களுக்குப் பூரி, பாயஸம், பருப்பு முதலிய பொருட்களையே கொடுத்தாள். அன்று ஸந்தோஷிமாதா விரதம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.

விரைவிலேயே சுனீதி கருவுற்றாள். உரிய காலத்தில் அழகே உருவான ஓர் ஆண் குழந்தைக்குத் தாயானாள். அன்று போலாநாத் ஊர்மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினான். குழந்தையை எடுத்துக் கொண்டு போலாநாத்தும், சுனீதியும் ஸந்தோஷிமாதா கோயிலுக்குச் சென்றார்கள். அருளே உருவான அந்தத் தெய்வத்தின் காலடியில் பிள்ளையைக் கிடத்தினார்கள். “தாயே! இந்தச் செல்வனுக்குத் தீர்க்க ஆயுசையும், திடத்தையும், உன் மீது நீங்காத பக்தியையும் நல்க வேண்டும்” என்று வேண்டினார்கள். “உன் நினைவாக என்றும் நாங்கள் இருக்க ஆசீர்வாதம் செய்தருள்வாயாக ” என்று கேட்டுக் கொண்டார்கள்.

சுனீதி தங்கமான பெண், எப்போதும் என் நினைவாகவே இருக்கிறாள். அடிக்கடி என் கோயிலுக்கு வருகிறாள், நான் அவள் வீட்டிற்குப் போகிறேன் என்று ஸந்தோஷிமாதா நினைத்தாள். தீயவர்களுக்கு அச்சத்தை உண்டாக்கினால்தான் அவர்கள் திருந்துவார்கள்.

எனவே ஸந்தோஷிமாதா தனக்கு நைவேத்தியப் பொருளான வறுத்த கடலையாலும், வெல்லத்தாலும் முகம் முழுவதும் ஒட்டவைத்த நிலையில் தீயவர்களுக்கு பயங்கரத் தோற்றமும் நல்லவர்களுக்கு அழகே உருவான தோற்றத்தோடும், காட்சி தந்த வண்ணம் புறப்பட்டாள்.

சுனீதியின் வீட்டை அடைந்தாள். சுனீதி மாமியாரும் அவள் மைத்துனர்களின் மனைவிமார்களும் குழந்தைகளும் மாதாவின் அந்தக் கோரவடிவத்தைக் கண்டு பெரும் கலவரம் அடைந்தார்கள். “பேய் வருகிறது! பேய் வருகிறது!” என்று புலம்பினார்கள், கூச்சலிட்டார்கள்.

அது சமயம் சுனீதி பிள்ளைக்குப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்! வந்தவள் மாதாதான் என்பதை அவள் புரிந்துகொண்டாள். எனவே அவள் தன்னை மறந்தாள். தாய் தன் வீட்டிற்கே வந்து விட்டாள் என்று பேரானந்தம் அடைந்தாள். எனவே அவள், ஸந்தோஷிமாதாகி ஜெய்! என்று குரல் எழுப்பியபடியே தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து எழுந்தாள். அதனால் அவள் மடியிலிருந்து குழந்தை கீழே விழுந்தது. இதைப் பார்த்து அவள் மாமியார் பெருங்கோபம் கொண்டாள். “இந்தக் கோர உருவத்தைப் பார்த்து இவள் ஏன் இப்படிக் குதிக்கிறாள். பிள்ளையைக் கூட உதறி விட்டாளே!” என்று திட்டினாள். கருணையே வடிவான மாதா விட்டுவிடுவாளா? வந்து குழந்தையை ஏந்திக்காத்தாள்.

மாதாவின் மாயையால் எங்கு பார்த்தாலும் குழந்தைகளாகவே தெரியத் தொடங்கின. அந்தக் காட்சியைக் கண்ட கிழவி அன்னையின் பெரும் சக்தியைக் கண்டு பக்தியுடன் கைகூப்பி நின்றாள். குற்றம் செய்து தெய்வத்தை நிந்தித்தவர்கள் ஒரு நாள் நடுங்கித்தானே ஆக வேண்டும்? கிழவியும்  அவள் மருமக்கள்மார்களும் பிள்ளைகளும் மாதாவின் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள்.

மாதா அவர்களை மன்னித்தாள். “நல்லார் ஒருவருக்காகப் பெய்யும்மழை எல்லோருக்கும் பயன்படுவது போல ” நான் என் பரம பக்தையான சுனீதியின் பொருட்டே இங்கு வந்தேன். பாவிகளான நீங்களும் அந்தப் புண்ணியவதியால் என்னைத் தரிசிக்கும் பேறுபெற்றீர்கள். இனி எந்த வேறுபாடுமில்லாமல் வாழுங்கள். “ ஒற்றுமையாக வாழ்வது தான் உயர்வதற்கு வழி ” என்று கூறிய ஸந்தோஷிமாதா தன் கையிலிருந்த குழந்தையைச் சுனீதியிடம் கொடுத்து ஆசீர்வதித்தாள். பின் அழகுத் திருவுருவோடு அனைவருக்கும் காட்சி கொடுத்து மறைந்தாள்.

சுனீதியும் போலாநாத்தும், அவர்கள் குழந்தையும் எல்லா நலனும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தார்கள்.

ஸ்ரீஸந்தோஷி மாதா கீ ஜெய்!

கயிலை மயிலையில் நாரதப்பெருமான் வினாயகப் பெருமானைச் சந்தித்து வணங்கினார். “வினை தீர்க்கும் விக்னேஸ்வரா! மண் உலகெங்கும் உங்கள் மகளான ஸந்தோஷியின் புகழ் நாளும் பெருகுகின்றது; அவள் பரமபக்தர்களான சுனீதியும், போலாநாத்தும் போல தனது பக்தர்களுக்குச் சகல ஐஸ்வர்யங்களையும் தந்து வாழ வைக்கிறாள்” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார்.

நாரத முனிவரே! என் மகள் ஸந்தோஷியைத் துதிப்பவர்களும், அவள் கதையைப் படிப்பவர்களும், கேட்பவர்களும் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். என் மகள் அவர்கள் அனைவரையும் காத்து அருள்புரிவாள்” என்று விநாயகர் கூறினார். நாரத முனிவர் நாயகனான வினாயகனை வணங்கி விடைபெறும் பொழுது ‘ஸந்தோஷி மாதா கீ ஜெய் ’ என்று குரல் எழுப்பிப் புறப்பட்டார்.

பலன்: ஸந்தோஷி மாதாவின் அருளால் சகல மக்களும் சகல ஐஸ்வர்யங்களையும் அடைவார்கள். கல்யாணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் கைகூடும், பிரிந்த கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவு நீங்கி அன்பு நிலவும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ஸ்ரீஸந்தோஷி மாதா கீ ஜெய்!

ஸ்ரீ ஸந்தோஷி மாதா பூஜை

ஸ்ரீஸந்தோஷிமாதாவிற்குரிய வெள்ளிக்கிழமை விரதம் ஏற்றவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் ஸ்ரீஸந்தோஷிமாதாவிற்கு பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் கதையைப் படித்து ஆர்த்தி செய்த பிறகு எல்லோருக்கும் தீர்த்தம், கடலை, வெல்லம், ப்ரஸாதம் விநியோகம் செய்ய வேண்டும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. நைவேத்ய பொருட்கள்: வறுத்த கடலை, கொண்டைக்கடலை, சுண்டல், நெய் பருப்பு பாயஸம், வெல்லம், தேங்காய், வாழைப்பழம்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும் (பக்கம் 29ம் முதல் பக்கம் 39 வரை)

(தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே (பக்கம் 12)

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ஸங்கல்பம்


பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச’தி தமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ, ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,...*.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்), உத்தராயனே /தக்ஷிணாயனே, ....*.... ருதௌ (காலத்தின் பெயர்), ....*.... மாஸே (மாதத்தின் பெயர்), ......*.....பக்ஷே (பக்ஷத்தின் பெயர்),...*....சு’பதிதௌ (திதியின் பெயர்), ப்ருகு வாஸர யுக்தாயாம், ......*.......நக்ஷத்ர யுக்தாயாம் (நக்ஷத்திரத்தின் பெயர்), சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ.

மம சீ’க்ரமேவ விவாஹ ப்ராப்த்யர்த்தம், மம தீர்க்க ஸௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம், மம பர்த்துஸ்ச அந்யோந்ய ப்ரீதிபுரஸ்ஸரம் அவியோகார்த்தம், ஸத் ஸந்தான பலா வாப்த்யர்த்தம், ஸகல ஸௌபாக்ய ஸித்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் ஸ்ரீஸந்தோஷி மாத்ரு பூஜாம் கரிஷ்யே. (அக்ஷதையை வடக்குப்புறம் கீழே போட்டு கை  அலம்பவும்.) *பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம் (யதாஸ்தானம்)

அகஜானன.... உபாஸ்மஹே (பக்கம் 33)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

“கணபதி ப்ரஸாதம் சி’ரஸா க்ருஹ்ணாமி”
(கணபதி ப்ரஸாதத்தைத் தலையில் தரித்துக் கொள்ளவும்.)

கண்டா பூஜை


(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

பிறகு ஸ்ரீஸந்தோஷிமாதா பூஜையை ஆரம்பிக்கவும்.

(வீட்டில் சுத்தமான இடத்தில், மேடை அமைத்து, அதன் மீது ஸந்தோஷிமாதா படத்தை வைத்து அலங்கரிக்கவும். படத்தின் முன்பாக தீபம் ஏற்றிவைக்கவும். சுத்த ஜலம் நிறைந்த ஒரு செம்பை (கலசம்) வைத்து, சந்தனம், குங்குமம் இடவும். செம்பிற்குள் அவரவர் சக்திக்கேற்ப நாணயம் ஒன்றைப் போடவும். செம்பின் மீது மாவிலைகள் வைத்து, அதன் மீது தேங்காய் ஒன்றை, மஞ்சள், சந்தனம், குங்குமம் தடவி புஷ்பத்தால் அலங்கரித்து, அதனை படத்திற்கு முன்பாக வைத்தும், ஸந்தோஷி மாதாவாக பாவித்தும் பூஜை செய்ய வேண்டும்.)

(கையில் புஷ்பம், வறுத்த கடலை, வெல்லம் எடுத்துக் கொள்ளவும்.)

த்யானம்

யாம் வை ஸ்துவந்தி ஸுஜனா: பராச’க்திரூபாம்
ச’க்தி த்ரயாத்மக தநூம் தனதான துஷ்டாம்/

ஸந்தோஷ பூர்ண ஹ்ருதயாம் ஸ்மரணாதபீஹ
ஸந்தோஷி மாதரம் அமூம் ப்ரணமாமி மூர்த்நா//

விக்நநாத ப்ரிய ஸுதாம் ஸந்தோஷீ மாதரம் சு’பரம்
த்யாயாமி ஹ்ருதயே தேவீம் வாஞ்ச்சிதார்த்த ப்ரதாயிநீம்//

ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: த்யாயாமி/
(புஷ்பம், கடலை, வெல்லம், ஸமர்ப்பிக்கவும்)

ஆவாஹனம்

ஸர்வமங்கள மாங்கல்யே மாதஸ் ஸர்வார்த்த தாயிநி/
ஆவாஹயாமி கும்பே (அ) ஸ்மிந் மம ஸௌபாக்ய ஸித்தயே//

ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: ஆவாஹயாமி/
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஸமஸ்த உபசார பூஜைகள்

கஜானனஸுதே தேவி காஞ்சநேன விநிர்மிதம்/
பக்த்யா தாஸ்யே ஸ்வீகுருஷ்வ வரதா பவ ச ஆஸனம்//
ஸ்ரீஸந்தோஷீமாத்ரே நம: ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

கங்காதி ஸர்வாதீர்த்தேப்ய: நதீப்யச்ச ஸமாஹ்ருதம்/
பாத்யம் ஸம்ப்ரததே தேவி க்ருஹாண கணப்ருத்ஸுதே//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரிணியால் தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் சேர்க்கவும்)

ஸௌவர்ண கலசே’ புண்யதீர்த்தேப்ய: ஸமுபாஹ்ருதம்/
ஸர்வாபீஷ்ட ப்ராதாத்ரீ த்வம் ததாம்யர்க்யம் க்ருஹாண போ://
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் சேர்க்கவும்)

ஆசம்யதாம் மஹாதேவி ஏலோசீ’ர ஸுவாஸிதம்/
ததாமி தீர்த்தமமலம் க்ருஹாண ஜகதம்பிகே//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் சேர்க்கவும்)

மதுபர்க்கம் மயாதேவி காஞ்சீ நூபுர சோ’பிதே/
ஸ்வீக்ருத்ய தயயா தேவி குருமஹ்யம் து மங்களம்//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தேன்கலந்த தயிரை தொட்டு தெளிக்கவும்)

பஞ்சாம்ருதம் இதம் திவ்யம் பஞ்ச பாதக நாச’னம்/
பஞ்ச பூதாத்மிகே தேவி பாஹி ஸ்வீக்ருத்ய ச’ங்கரி//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம:
பஞ்சாம்ருதஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் பஞ்சாம்ருதம் தொட்டு தெளிக்கவும்)

ஸ்நாஸ்யதாம், பாபநாசா’ய யா ப்ரவ்ருத்த ஸுராபகா/
மயார்பிதா த்வம் க்ருஹ்ணீஷ்வ ப்ரீதா பவ தயாநிதே//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம:
சு’த்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தொட்டு தெளிக்கவும்)

துகூலாந்யம் பராணீஹ வஸ்த்ராணி விவிதாநி ச/
ததாமி தேவ தேவேசி’ வித்யாதிஷ்டாநபீடிகே//
ஸ்ரீ ஸந்தோஷீ மாத்ரே நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

உபவீதம் மயா ப்ரீத்யா காஞ்சநேன விநிர்மிதம்/
க்ருஹீத்வா த்வயி பக்திம் மே ப்ரயச்ச கருணாநிதே//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம:
யஜ்ஞோபவீதார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

கந்தம் ஸுவாஸிதம் ரக்தம் குங்குமாந்விதமம்பிகே/
கணநாத ஸுதே தேஹி தீர்க்க மங்கள ஸூத்ரகம்//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: கந்தான் தாரயாமி
(சந்தனம், குங்குமம் இடவும்)

கர்ப்பாஸஸூத்ரம் தாஸ்யாமி ஸுவர்ணமணி ஸம்யுதம்/
பூஷணார்த்தம் மயா நீதம் தேஹி மே வரமுத்தமம்//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம:
மங்களஸூத்ரம் ஸமர்ப்பயாமி
(நூலின் நடுவில் மஞ்சளை கட்டி ஸமர்ப்பிக்கவும்)

ஜாதீ சம்பக புந்நாக கேதகீ வகுளாநி ச/
மயார்ப்பிதானி ஸுபகே க்ருஹாண ஜகதம்பிகே//
ஸ்ரீஸந்தோஷீ மாத்ரே நம: புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பமாலை/ புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

அங்க பூஜை

ஓம் பாவநாயை        நம: பாதௌ        பூஜயாமி (கால்கள்)
ஓம் குணஜ்ஞாயை    நம: குல்பே        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஜகத்தாத்ர்யை    நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் ஜாக்ரதாதி ஸித்திதாயை    நம: ஜாநுநீ        பூஜயாமி (முட்டி)
ஓம் ஊரூநிர்ஜித ரம்பாயை    நம: ஊருணீ         பூஜயாமி (தொடை)
ஓம் காஞ்சீ குணவிராஜிதாயை    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் நபோமத்ய கதாயை    நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் கநகதுல்ய ச’ரீராயை    நம: ஜகனம்        பூஜயாமி (வயிறு, கைகள்)
ஓம் வரதான ப்ரீயாயை    நம: வக்ஷ:        பூஜயாமி (மார்பு)
ஓம் ஸ்தநிதோபம் வாசே    நம: ஸ்தநௌ        பூஜயாமி (மார்பகம்)
ஓம் கண்டீரவ ஸமத்வந்யை    நம: கண்ட்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் தேஜ நிர்ஜிதஞ்ஜாயை    நம: நேத்ரே        பூஜயாமி (கண்கள்)
ஓம் லலநாஜ ஸம்பூஜ்யாயை    நம: லலாடம்        பூஜயாமி (நெற்றி)
ஓம் கருணாரஸபூர்ணாயை    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் சி’சி’ரீக்ருத ஸ்வாந்தாயை    நம: சி’ர:        பூஜயாமி (தலை)
ஓம் சிந்தாதீத குணாந்விதாயை    நம: சிகுரம்        பூஜயாமி (கிரீடம்)
ஓம் தரணீதேவி பூஜ்யாயை    நம: தம்மில்லம்         பூஜயாமி (முகமண்டலம்)
ஓம் ஸந்தோஷீ மாத்ரே    நம: ஸர்வாண்யங்காநி    பூஜயாமி (முழுவதும்)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 35. சந்தோஷி மாதா பூஜை »
அகிலம் யாவும் அன்னையின் அருளாலேயே வாழ்கிறது. அன்னை உலகைக் காக்கப் பல்வேறு வடிவங்கள் எடுத்து ... மேலும்
 
சுனீதியின் கதைஆனந்த நகர் என்பது ஓர் அழகிய ஊர். அந்த ஊரில் கோபால் நாத் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். ... மேலும்
 
ஸந்தோஷிமாதா அஷ்ட்டோத்தரச ’த நாமாவளி:ஓம் ஸந்தோஷஜநந்யை        நம:ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar