Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 36. லக்ஷ்மீ ஹயக்ரீவ பூஜை
லக்ஷ்மீ ஹயக்ரீவ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
06:11

எல்லாம் வல்ல பரம்பொருள் மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரங்கள் பற்றி நாம் யாவரும் அறிந்ததே. அஃதே போல் நம்மை உய்விக்கும் பொருட்டு புரிந்த பல திருவிளையாடல்களில், ஹயக்ரீவ அவதாரம் ஒன்று. ஹயக்ரீவன், குதிரை போன்ற திருமுக மண்டலத்துடனும், ஸ்படிகமணி போல் தூய வெண்மை நிறத்தோடு, தனது திருமடியில், திருமகளைத் தாங்கியும், திருக்கைகள் நான்குடனும், ஆவணி மாதம் ‘திருவோண ’ நட்சத்திரத்தில் அவதரித்தார். இப்பெருமானே கல்விக்கு முதற் கடவுள். ஓங்கார வடிவினன். எல்லாக் கலைகளுக்கும் உறைவிடமாக உள்ளவர். கல்வி கற்க, வரும் தடைகளை எல்லாம் ஒழிப்பவர். மதுகைடபர்கள் எனும் இரண்டு அசுரர்கள் தம் வலிமையால் பிரம்மனிடமிருந்து வேதங்களைக் கவர்ந்து சென்றுவிட்டனர். அதனால் பிரம்மன், செய்வதறியாது திகைத்து நின்ற போது, இப்பெருமானே பிரம்மனுக்கு வேதங்களை உபதேசித்தருளினார்.

கடலூருக்கு அருகில் உள்ள திருவஹீந்திரபுரத்திலே மலை மீது, கருட பகவானால் உபதேசம் பெற்று, ஹயக்ரீவ மந்திரத்தை, தேசிகன் ஜபித்து தியானிக்க, நம் பெருமான் ஹயக்ரீவ வராகக் காட்சி தந்து அருள் புரிந்தார்.

பலன்:

இப்பெருமானைத் தியானித்து, பூஜிக்க எல்லா கல்வி, கலை ஆகியவற்றில் மிகச்சிறந்து விளங்கலாம் என்பது திண்ணம். குறிப்பாக ஹயக்ரீவர் ஸ்லோகம் நித்தம் பாராயணம் செய்திடல், மாணவ, மாணவிகளுக்கு அவசியம்.

லக்ஷ்மீ ஹயக்ரீவ பூஜை

காலம் ஒவ்வொரு திருவோண நக்ஷத்திரத்தன்றும், புதன் மற்றும் சனிக்கிழமையும், நவமியன்றும் லக்ஷ்மி ஹயக்ரீவர் பூஜை செய்வது மிகச்சிறப்பாகும்.

பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

2. லக்ஷ்மீ ஹயக்ரீவ படத்தை அலங்கரித்து வைக்கவும்.

3. நைவேத்ய பொருட்கள்: சாதம், பாயஸம், சர்க்கரைப் பொங்கல், வடை, தேங்காய், பக்ஷணங்கள், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு.

4. துளசி, மற்றும் தாமரையால் அர்ச்சிப்பது விசேஷம்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ஸ்ரீ. விக்னேச்வர பூஜை
(மஞ்சள் பிள்ளையார்)

ஒவ்வொரு பூஜைக்கும் முன்னால் இந்த விக்னேச்வர பூஜையை செய்ய வேண்டும் (பக்கம் 29ம் முதல் பக்கம் 39 வரை)

(தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ப்ரார்த்தனை + அர்ச்சனை + நிவேதன மந்த்ரங்கள் + தீபாராதனை + நமஸ்காரம்)

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம் (பக்கம் 12)

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த, துரித க்ஷயத்வாரா, ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே, சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச’தி தமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே , *....நாம ஸம்வத்ஸரே, *.... அயனே, *....ருதௌ,*.....மாஸே, *...பாக்ஷே, *.....சு’பதிதௌ, *.......வாஸர யுக்தாயாம், *.....நக்ஷத்ர யுக்தாயாம் ச ஏவங்குண விசே’ஷண விசி’ஷ்டாயாம் அஸ்யாம் *...சு’பதிதௌ,

அஸ்மாகம் ஸஹகுடும்பானாம், க்ஷேமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுராரோக்ய, ஐச்’வர்யாபிவ்ருத்யர்த்தம், தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பலபுருஷார்த்த ஸித்யர்த்தம், விசே’ஷத: மம புத்ர, புத்ரீ, பௌத்ர, பௌத்ரீ: ஸர்வ வித்யா அதிபாரங் கதா ஸித்யர்த்தம், தன தான்ய அபிவ்ருத்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த ஸித்யர்த்தம் மனோவாஞ்சாபலஸித்யர்த்தம், ஸமஸ்த துரிதோபசா’ந்த்யர்த்தம், ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ கருணாகடாக்ஷ ஸித்யர்த்தம், ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ பூஜாம் கரிஷ்யே/ ததங்கம் கலச’பூஜாம் ச கரிஷ்யே//

அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும்.

* பஞ்சாங்கம் பார்க்கவும்.

விக்னேச்’வர உத்யாபனம்
(யதாஸ்தானம்)

அகஜானன............உபாஸ்மஹே

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

“விக்னேச்’வரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

(என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது அக்ஷதை போட்டு வடக்கு திசையில் நகர்த்த வேண்டும்.)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

தியானம்

ஓம் க்ஷீராம்போநிதி ஸங்காச’ம் கமலாயுத லோசனம்
கலாநிதி க்ருதாவாஸம் கர்ணிகா பீட வாஸினம்/

ஞான முத்ராக்ஷவலயம் ச’ங்க சக்ர வஸத்கரம்
பூஷாகிரண ஸந்தோஹ நீராஜித திகந்தரம்//

அஸ்மின் சித்ரபடே /பிம்பே/ ப்ரதிமாயாம்
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவம் த்யாயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ஆவாஹனம்

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்/
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே//

ப்ரணவ ஸூத்கீத விக்ரஹ ப்ரணுத ஸம்காத ஸுக்ரஹ
விஹத துர்வாதி துர்க்ரஹ விமதஸந்தாத நிக்ரஹ/

வித்ருத ஸுஞான முத்ரண விநிஹதாக்ஞான முத்ரண
ஜய ஜய ஸ்ரீஹயானன ஜய ஜய ஸ்ரீ ஹாயனன//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ஸ்வாமினம் ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ராணப்ரதிஷ்டா

(பக்கம் 41 ம் பக்கம் முதல் பக்கம் 48ம் வரை உள்ளபடி செய்யவும்.)

ப்ராணப்ரதிஷ்டா

ப்ராணபிரதிஷ்டை என்பது எந்த தெய்வத்தை பூஜை செய்கிறோமோ அந்த விக்ரஹம் அல்லது பிம்பத்திற்கு ப்ராணனை (உயிர்) கொடுத்து பூஜை செய்வதை ப்ராணப்பிரதிஷ்டை என்கிறோம். ப்ராணபிரதிஷ்டை செய்யும் போது முதலில் பஞ்சகவ்யத்தை சிறிதளவு விக்ரஹம் அல்லது பிம்பத்தின் மேல் தெளிக்கவும். ஸ்வாமி படத்திற்கு ப்ராணப்ரதிஷ்டை கிடையாது.

ப்ராணப்ரதிஷ்டா மந்த்ர:

............ கோட்டிட்ட இடங்களில் எந்த தெய்வத்தை பூஜை செய்கிறீர்களோ அந்த தெய்வத்தின் பெயரைச் சொல்லவும்.

ஓம் அஸ்ய ஸ்ரீ ...........
ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய

(வலதுகையை தலையின் மேல் வைத்து சொல்லவும்.)

ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்’வரா: ருஷய:

(வலதுகையை மூக்கின் மேல் வைத்துச் சொல்லவும்.)

ருக் யஜுஸ்ஸாம அதர்வாணி ச்சந்தாம்ஸி

(வலதுகையை நடுமார்பில் வைத்துச் சொல்லவும்.)

ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹார காரிணீ ப்ராணச ’க்தி:
பரா தேவதா

(வலதுகையை வலதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஆம் பீஜம்

(வலதுகையை இடதுமார்பில் வைத்து சொல்லவும்.)

ஹ்ரீம் ச ’க்தி

(வலதுகையை நடுமார்பில் வைத்து சொல்லவும்.)
க்ரோம் கீலகம்

(இரண்டு கையையும் சேர்த்து கும்பிடவும்.)
ஸ்ரீ.........ப்ராண ப்ரதிஷ்டார்த்தே ஜபே விநியோக:

(ஆள்காட்டி விரலால் கட்டை விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:
(கட்டைவிரலால் ஆள்காட்டி விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:

(கட்டை விரலால் நடு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
க்ரோம் மத்யமாப்யாம் நம:

(கட்டை விரலால் மோதிர விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஆம் அனாமிகாப்யாம் நம:

(கட்டை விரலால் சுண்டு விரலை கீழிலிருந்து மேலாக தடவவும்.)
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நம:

(படத்தில் உள்ளபடி இரண்டுகைகளையும் தடவவும்.)

க்ரோம் கரதலகரப்ருஷ்ட்டாப்யாம் நம:
(ஹ்ருதயத்தில் கை வைக்கவும்.)

ஆம் ஹ்ருதயாய நம:

(தலையில் கை வைக்கவும்.)
ஹ்ரீம் சி’ரஸே ஸ்வாஹா

(குடுமியை தொட்டுச் சொல்லவும்.)
க்ரோம் சி’காயை வஷட்

(படத்தில் உள்ளதுபோல் செய்யவும்.)
ஆம் கவசாய ஹும்

(கண்களைத் தொட்டு மந்திரம் சொல்லவும்.)
ஹ்ரீம் நேத்ரத்ரயாய வௌஷட்

(இரண்டு கைகளையும் தட்டி சொல்லவும்.)
க்ரோம் அஸ்த்ராய பட்

(தலையை சுற்றிச் சொடுக்கு போட்டுக் கொண்டே சொல்லவும்.)
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:

தியானம்

ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ
தருண ஸரோஜாதிரூடா கராப்ஜை:
பாச ’ம் கோதண்ட மிக்ஷூத்பவ
மளிகுண மப்யங்குச ’ம் பஞ்சபாணான்
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிநயன
லஸிதா (ஆ) பீன வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது
ஸுககரீ ப்ராணச ’க்தி: பரா ந:

ஆம் ஹ்ரீம் க்ரோம் க்ரோம் ஹ்ரீம் ஆம் அம், யம், ரம், லம், வம், ச ’ம், ஷம், ஸம், ஹம் ஹம்ஸ: ஸோஸஹம், ஸோஸஹம் ஹம்ஸ:

அஸ்யாம் மூர்த்தௌ .......(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)
ப்ராணஸ்திஷ்டது ...........(ப்ரதான ஸ்வாமியின் பெயர்)

ஜீவஸ்திஷ்டது ஸர்வேந்த்ரியாணி வாங்மனஸ்  த்வக் சக்ஷு: ச்’ரோத்ர ஜிஹ்வா  க்ராண வாங்  பாணி  பாத  பாயூபஸ்தானி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்டந்து ஸ்வாஹா ஸான்னித்யம் குரு ஸ்வாஹா

(அக்ஷதை, புஷ்பம், ஜலம் இவை மூன்றையும் பிம்பத்தின் மீது போடவும்.)

அஸுனீதே புனரஸ்மாஸு சக்ஷு:
புன: ப்ராணமிஹ நோ தேஹிபோகம்
ஜ்யோக் பச்’யேம ஸூர்ய முச்சரந்த
மனுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி

பஞ்சதச ’ ஸம்ஸ்காரார்த்தம் பஞ்சதச ’ வாரம் ப்ரணவஜபம் (ஓம் 15 முறை சொல்லவும்) க்ருத்வா ப்ராணான் ப்ரதிஷ்டாபயாமி

(மந்திரம் சொன்ன பிறகு பால், தேன், நெய் கலந்து ஒரே பாத்திரத்தில் ப்ராண சக்திக்கு நிவேதனம் செய்யவும்.)

ஆவாஹிதோ பவ

ஸ்தாபிதோ பவ

ஸன்னிஹிதோ பவ

ஸன்னிருத்தோ பவ

அவகுண்டிதோ பவ

ஸுப்ரீதோ பவ

ஸுப்ரஸன்னோ பவ

ஸுமுகோ பவ

வரதோ பவ

ப்ரஸீத ப்ரஸீத

(கையினால் பிம்பத்தைத் தொட்டுச் சொல்லவும்.)

(ஒரு தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமியின் ஸர்வஜகன்நாத
யாவத் பூஜாவஸானகம்
தாவத் த்வம் ப்ரீதி பாவேன
பிம்பே (அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

சித்ரபடே (படமாகயிருந்தால்), கலசே ’ (கலசமாகயிருந்தால்) கும்பேஸ்மின் (கும்பத்திற்கு), ப்ரதிமாயாம் (யந்திரத்திற்கு)

(பல தெய்வமாக இருந்தால்)

ஸ்வாமின: ஸர்வஜகன்நாதா:
யாவத் பூஜாவஸானகம்
தாவத் யூயம் ப்ரீதிபாவேன
பிம்பே(அ)ஸ்மின் ஸன்னிதிம் குரு

பெண்தேவதையாக இருந்தால் கீழ்கண்டவாறு சொல்லவும்.

தேவி ஸர்வ ஜகன்மாதே

பிறகு அந்தந்த பிரதான பூஜையைத் தொடரவும்.

ஸமஸ்த உபசார பூஜைகள்

ஸகல ஸித்தாந்த சோதன ஸுகர வேதாந்த போதன
நிகில துஷ்கர்ம பந்தன நிகம ஸத்தர்ம ஸாதன/
விதர தாம்னாய வேதன விலஸ  தோங்கார நாதன
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

ப்ரணவ ஹேஷா வினோதன ப்ரணத தோஷாபநோதன
ஸுக்ருத  பாஷாபிவாதன லலிதபூஷா ஸுவாதன/
நவமணீ ஷாப்திதாரண பவபயோத்பத்தி வாரண
ஜயஜய ஸ்ரீஹயானன ஜயஜய ஸ்ரீஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: பாத்யம் ஸமர்ப்பயாமி
(அர்க்ய பாத்திரத்தில் தீர்த்தம் விடவும்.)

கமலதாமனி பயோநிதே விமல தாமனி கலாநிதே
விமல தீப்தே ஸுவாங்மய வித்ருத சக்தே ஜகன்மய
விதத ஸத்பானு மண்டித ச்ரிதகலாதான பண்டித
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி
(உத்தரிணியால் தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் சேர்க்கவும்)

ஸுஜன ரக்ஷா விதாயக ஸ்வஜன வீக்ஷா ப்ரதாயக
ச்ரித ஜனத்ராண தீக்ஷித ச்ருதிசி’காஜால தீக்ஷித/
ஸ்திர சதுர்வேத பஞ்ஜர ஸ்வர மஹாமோத பஞ்ஜர
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி
(கிண்ணத்தில் ஜலம் விடவும்)

கரவிராஜத் ஸுதர்சன கலுஷராசீ விகர்சன
ஸுக்ருத தத்த ஸ்வதர்சன ச்ருதி மஹாவாக் விமர்சன/
விலஸதம்போஜ வாஸன விதர தலிதாக்ஞ வாஸன
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீ வாய நம: ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தால் தீர்த்தம் தெளிக்கவும்)

ஸ்நானாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(கிண்ணத்தில் ஜலம் விடவும்)

ஸகல வாணீச நாயகஸகல மேதா ப்ரதாயக
ஹஸித தாம்ப்ர ப்ரதிஷ்டித ஸுத்ருட பீஜாபிவேஷ்டித/
தயாஸார ரூபக ஹ்ருத ஸுராரி ப்ரதாயக
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி
(வஸ்த்ரம் அணிவிக்கவும்)

ஸ்புரிக சுக்த ப்ரபாயத  ருரித விச்வத்ரயீமய
விசதவாணீ விராஜித விவித லோகைக பூஜித/
நிபிட தேஜோ விநிஸ்ருத நிஜகராஞ்சத் ஸபுஸ்தக
ஜயஜயஸ்ரீ ஹயானன ஜயஜயஸ்ரீ ஹயானன//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
உபவீதம் ஸமர்ப்பயாமி, ஆபரணாளி ஸமர்ப்பயாமி
(பூணூல், ஆபரணங்கள் அணிவிக்கவும்)

ஓம் நமோஹய சிரஸே வித்யாத்யக்ஷாய வை நம:
நமோ வித்யாதரஸ்வரூபாய வித்யாதாத்ரே நமோ நம:/
நம: சாந்தாய தேவாய த்ரிகுணாயாத்மனே நம:
ஸுராஸுர நிஹந்த்ரே ச ஸர்வ துஷ்ட விநாசினே//
ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: கந்தான் தாரயாமி,
அக்ஷதான் ஸமர்ப்பயாமி
(சந்தனமிடவும், அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

ஸர்வ லோகாதிபதயே பிரம்ஹ ரூபாய வை நம:
நமச்சேச்வர வந்த்யதாய சங்க சக்ர தராயாச/
நம ஆத்யாய தாந்தாய ஸர்வ ஸத்வ ஹிதாய ச
த்ரிகுணாய குணாயைவ ப்ரம்ஹ விஷ்ணு ஸ்வரூபிணே//
கந்தோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமம் இடவும்)

கர்த்ரே ஹர்த்த்ரே ஸுரேசாய ஸர்வகாய நமோ நம:/
இத்யேவம் ஸம்ஸ்தவம் க்ருத்வா தேதேவம் விசிந்தயேத்//
ஹ்ருத்பத்ம விமலே ருத்ர சங்க சக்ர கதாதரம்/
ஸூர்யகோடி ப்ரதீகாசம் ஸர்வாவயவ ஸுந்தரம்/
ஹயக்ரீவம் மஹேசேசம் பரமாத்மான மவ்யயம்.
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
புஷ்பாணி ஸமர்ப்பயாமி
(புஷ்பம் அல்லது மாலை போடவும்)

அங்க பூஜா

(ஒவ்வொரு நாமாவைச் சொல்லி புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்)

ஓம் ஜ்ஞாநாநந்தமயதேவாய    நம: பாதௌ        பூஜயாமி (கால்)
ஓம் நிர்மல ஸ்படிகாக்ருதே    நம: குல்பௌ        பூஜயாமி (கணுக்கால்)
ஓம் ஸர்வ வித்யானாம் ஆதாராய நம: ஜங்கே        பூஜயாமி (முழங்கால்)
ஓம் சு’த்த ஸ்படிகமணி பூப்ருதே    நம: ஜானுனீ        பூஜயாமி (முட்டி)
ஓம் ஹதா சேஷாவத்யாய    நம: ஊரூ        பூஜயாமி (தொடை)
ஓம் வாகீசாக்க்யாய    நம: கடிம்        பூஜயாமி (இடுப்பு)
ஓம் வாஸுதேவஸ்ய மூர்த்தயே    நம: குஹ்யம்        பூஜயாமி (மர்மம்)
ஓம் விசு’த்த விக்ஞானாய     நம: நாபிம்        பூஜயாமி (தொப்புள்)
ஓம் தயாநிதயே        நம: உதரம்        பூஜயாமி (வயிறு)
ஓம் வாக் ப்ரபஞ்சாய    நம: வக்ஷ        பூஜயாமி (மார்பு)
ஓம் காருண்யநாதாய    நம: பார்ச்’வௌ         பூஜயாமி (இடுப்பு)
ஓம் வஞ்சித பாகதேய    நம: ஹ்ருதயம்         பூஜயாமி (மார்பு)
ஓம் மந்த்ரமய சரீராய    நம: ஸ்கந்தௌ        பூஜயாமி (தோள்)
ஓம் ஜ்ஞான விக்ஞான பாஸ்கராய நம: கண்டம்        பூஜயாமி (கழுத்து)
ஓம் சுந்தர மண்டல மத்யஸ்தாய    நம: பாஹூன்        பூஜயாமி (புஜதண்டம்)
ஓம் ச’ங்கசக்ர கதாபத்ம
ஞான புஸ்தக தாரிணே     நம: ஹஸ்தான்        பூஜயாமி (கைகள்)
ஓம் ஹயக்ரீவாய        நம: முகம்        பூஜயாமி (முகம்)
ஓம் அஜ்ஞான நாச’நாய    நம: நாஸிகாம்        பூஜயாமி (மூக்கு)
ஓம் அச்யுதாநந்த ரூபாய    நம: அக்ஷிணீ        பூஜயாமி (கண்கள்)
ஓம் விஷ்ணுசிவஸ்துத்யாய    நம: கர்ணௌ        பூஜயாமி (காதுகள்)
ஓம் கஸ்தூரீ திலகாங்கிதாய    நம: பாலம்         பூஜயாமி (நெற்றி)
ஓம் ஸர்வ வேதாத்மனே    நம: கிரீடம்        பூஜயாமி (தலை)
ஓம் லக்ஷ்மீ ஹயக்ரீவாய    நம: ஸர்வாண் யங்கானி    பூஜயாமி (முழுவதும்)

ஹயக்ரீவாஷ்டோத்தர ச’த நாமாவளி:
(புஷ்பம், அக்ஷதையால் அர்ச்சனை செய்யவும்)

ஓம் ஹயக்ரீவாய        நம:
ஓம் மஹாவிஷ்ணவே    நம:
ஓம் கேச’வாய        நம:
ஓம் மதுஸூதநாய    நம:
ஓம் கோவிந்தாய        நம:
ஓம் புண்டரீகாக்ஷாய    நம:
ஓம் விஷ்ணவே        நம:
ஓம் விச்’வம்பராய    நம:
ஓம் ஹரயே        நம:
ஓம் ஆதித்யாய (10)    நம:
ஓம் ஸர்வவாகீசா’ய    நம:
ஓம் ஸர்வாதாராய    நம:
ஓம் ஸநாதநாய        நம:
ஓம் நிராதாராய        நம:
ஓம் நிராகாராய        நம:
ஓம் நிரீசா’ய        நம:
ஓம் நிருபத்ரவாய    நம:
ஓம் நிரஞ்ஜநாய        நம:
ஓம் நிஷ்களங்காய    நம:
ஓம் நித்ய த்ருப்தாய (20)    நம:
ஓம் நிராமயாய        நம:
ஓம் சிதானந்தயாய    நம:
ஓம் ஸாக்ஷிணே        நம:
ஓம் ச’ரண்யாய        நம:
ஓம் ஸர்வதாயகாய    நம:
ஓம் ஸ்ரீமதே        நம:
ஓம் லோகத்ரயாதீசா’ய    நம:
ஓம் சி’வாய        நம:
ஓம் ஸாரஸ்வத ப்ரதாய    நம:
ஓம் வேதோத்தர்த்ரே (30)    நம:
ஓம் வேதநிதயே        நம:
ஓம் வேதவேத்யாய    நம:
ஓம் புராதனாய        நம:
ஓம் பூர்ணாய        நம:
ஓம் பூரயித்ரே        நம:
ஓம் புண்யாய        நம:
ஓம் புண்யகீர்த்தயே    நம:
ஓம் பராத் பரஸ்மை    நம:
ஓம் பரமாத்மனே        நம:
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே (40)    நம:
ஓம் பரேசா’ய        நம:
ஓம் பாரகாய        நம:
ஓம் பரஸ்மை        நம:
ஓம் ஸர்வவேதாத்மகாய    நம:
ஓம் விதுஷே        நம:
ஓம் வேத வேதாந்தபாரகாய    நம:
ஓம் ஸகலோபநிஷத் வேத்யாய    நம:
ஓம் நிஷ்களாய        நம:
ஓம் ஸர்வசா’ஸ்த்ரக்ருதே    நம:
ஓம் அக்ஷமாலா ஜ்ஞான
முத்ரா யுக்தஹஸ்தாய    நம:
ஓம் வரப்ரதாய (51)    நம:
ஓம் புராண புருஷாய    நம:
ஓம் ச்’ரேஷ்டாய        நம:
ஓம் ச’ரண்யாய        நம:
ஓம் பரமேச்’வராய    நம:
ஓம் சா’ந்தாய        நம:
ஓம் தாந்தாய        நம:
ஓம் ஜிதக்ரோதாய    நம:
ஓம் ஜிதாமித்ராய    நம:
ஓம் ஜகன்மயாய (60)    நம:
ஓம் ஜந்மம்ருத்யுஹராய    நம:
ஓம் ஜீவாய        நம:
ஓம் ஜயதாய        நம:
ஓம் ஜாட்யநாச’நாய    நம:
ஓம் ஜப்பரியாய        நம:
ஓம் ஜபஸ்துத்யாய    நம:
ஓம் ஜாபகப்ரியக்ருதே    நம:
ஓம் ப்ரபவே        நம:
ஓம் விமலாய        நம:
ஓம் விச்’வரூபாய (70)    நம:
ஓம் விச்’வகோப்த்ரே    நம:
ஓம் விதிஸ்துதாய    நம:
ஓம் விதீந்த்ர ஸம்ஸ்துதாய    நம:
ஓம் சி’வ ஸம்ஸ்துத்யாய    நம:
ஓம் சா’ந்திதாய        நம:
ஓம் க்ஷாந்திபாரகாய    நம:
ஓம் ச்’ரேய: ப்ரதாய    நம:
ஓம் ச்’ருதிமயாய        நம:
ஓம் ச்’ரேயஸாம்பதயே    நம:
ஓம் ஈச்’வராய (80)    நம:
ஓம் அச்யுதாய        நம:
ஓம் அனந்தரூபாய    நம:
ஓம் ப்ராணதாய        நம:
ஓம் ப்ருதிவீபதயே    நம:
ஓம் அவ்யக்தாய        நம:
ஓம் வ்யக்தரூபாய    நம:
ஓம் ஸர்வஸாக்ஷிணே    நம:
ஓம் தமோஹராய    நம:
ஓம் அஜ்ஞான நாச’காய    நம:
ஓம் பூர்ணசந்த்ர ஸமப்ரபாய(90)    நம:
ஓம் ஜ்ஞானதாய        நம:
ஓம் வாக்பதயே        நம:
ஓம் யோகினே        நம:
ஓம் யோகீசா’ய        நம:
ஓம் ஸர்வகாமதாய    நம:
ஓம் மஹாயோகினே    நம:
ஓம் மஹாமௌனினே    நம:
ஓம் மௌநீசா’ய        நம:
ஓம் ச்’ரேயஸாம்நிதயே    நம:
ஓம் பரம ஹம்ஸாய (100)    நம:
ஓம் விச்’வகோப்த்ரே    நம:
ஓம் விராஜே        நம:
ஓம் ஸ்வராஜே        நம:
ஓம் சு’த்தஸ்படிக ஸங்காசா’ய    நம:
ஓம் ஜடாமண்டல ஸம்யுதாய    நம:
ஓம் ஆதிமத்யாந்த ரஹிதாய    நம:
ஓம் ஸர்வ வாகீச்’வரேச்’வராய    நம:
ஓம் ஸ்ரீஹயக்ரீவாய (108)    நம:
ஓம் லக்ஷ்மீ ஹயக்ரீவ ஸ்வாமினே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

உத்தராங்க பூஜை

வனஸ்பதி ரஸோத்பூதோ கந்தாட்யோ குக்குலுர் வர:/
ஆக்ரேயஸ் ஸர்வதேவானாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம்//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
தூபம் ஆக்ராபயாமி
(சாம்பிராணி, ஊதுபத்தி காட்டவும்)

ஸாஜ்யம் த்ரிவர்த்திஸம்யுக்தம் வஹ்னிநா யோஜிதம் மயா/
தீபம் க்ருஹாண தேவேச’ த்ரைலோக்ய திமிராபஹ//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
தீபம் தர்ச’யாமி
(தீபத்தை காட்டவும்)

நைவேத்ய மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி/
தியோ யோ ந: ப்ரசோதயாத்//

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

தேவஸவித: ப்ரஸுவ/ ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி/
(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ/ ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி/
(மாலையில் பூஜை செய்தால்)

தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.

அம்ருதமஸ்து/ அம்ருதோபஸ்தரணமஸி//
(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு பின்வரும் மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா
ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: அன்னம், பாயஸம், மாஷாபூபம், பக்ஷ்ய விசேஷம் பலானி, நாளிகேர கண்டத்வயம், ஏதத் ஸர்வம் அம்ருதம் மஹாநைவேத்யம் நிவேதயாமி

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

ஸர்வபாபஹரம் திவ்யம் காங்கேயம் நிர்மலம் ஜலம்/
மயா த்வாசமநம் தத்தம் க்ருஹ்யதாம் புருஷோத்தம//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
நிவேதநாநந்தரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மூன்று முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

லவங்க கர்ப்பூரயுதம் தாம்பூலம் ஸுரபூஜிதம்/
ப்ரீத்யா க்ருஹாண தேவேச’மம ஸெபாக்யம் விவர்த்தய//
ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(தாம்பூலத்தின்மேல் தீர்த்தத்தை தெளிக்கவும்.)

ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்/
நேமோ வித்யுதோ பாந்தி குதோயமக்னி://

தமேவ பாந்த மனுபாதி ஸர்வம்/
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: கர்ப்பூர நீராஜனம் தர்சயாமி
(கற்பூர தீட்டம் காட்டவும்)

மந்த்ரபுஷ்பம்

(கையில் துளசி, புஷ்பங்கள் எடுத்துவைத்துக் கொண்டு, கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

யோபாம் புஷ்பம் வேத / புஷ்பவான் ப்ரஜாவான்
பசு’மான் பவதி / சந்த்ரமா வா அபாம் புஷ்பம்/
புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான் பவதி//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ஸ்வாமினே நம:
மந்த்ரபுஷ்பம் ஸமர்ப்பயாமி (புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

ப்ரார்த்தனை

சுந்தரமண்டல மத்யஸ்தம் ஹயக்ரீவம் ஸுநிர்மலம்/
ஞானமுத்ராதரம் தேவம் ச’ங்கசக்ர தரம்விபும்//

புஸ்தகம் வாமஹஸ்தேது தாரிணம் வனமாலினம்/
கிரீட ஹார கேயூர கடகாத்யை ரலங்க்ருதம்//

ச்’வேத வர்ண முதாராங்கம் ச’சி’கோடி ஸமப்ரபம்/
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஹயாஸ்யம் விச்’வதோமுகம்//

ஏவம் த்யாத்வா ஹயக்ரீவம் ஜபகோடி விசே’ஷத:/
ஜயாதி வ்யவஹாரேது வித்யாரம்பாதி கர்மஸு//

ஹயக்ரீவம் கராலாஸ்யம் ச’ங்கசக்ர தரம் விபும்/
ஸ்துவர்ணம் த்ரிநேத்ரம் ச த்யோயேத் தத் க்ரூரகர்மஸு//

ச’ங்க சக்ர கதாபத்ம ஞான புஸ்தக தாரிணம்/
ஹயக்ரீவ மஹம் வந்தே கிரீடாதி விபூஷிதம்//

ச’ங்கசக்ர கதா பத்ம ஞான புஸ்தக தாரிணம்/
பாசா’ங்குச’ தரம் தேவம் ஹயானனமஹம் பஜே//

ச’ங்கசக்ர கதா பத்ம சா’ர்ங்க பாசா’ஸி தாரிணம்/
ஞானாதி புஸ்தகதரம் ஹயானனமஹம் பஜே//

ச’ங்க சக்ர கதா பத்ம ஞான புஸ்தக தாரிணம்/
பாசாங்குசா’ஸி வஜ்ராதி கேடசூ’ல தரம் விபும்//

ஸ்ரீ பூ நீலாதிபம் தேவம் வனமாலா விபூஷிதம்/
ஹயக்ரீவம் பஜேந் நித்யம் ஸர்வாபரண பூஷிதம்//

ச’ரச்’ச’சா’ங்க பரபமச்’வ வக்த்ரம்
முக்தமாயை  ராபரணை  ருபேதம்/
ரதாங்க ச’ங்காஞ்சித பாத யுக்மம்
ஜானுத்வயந்யஸ்த கரம் பஜாமி//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ஸ்வாமினே நம:
ப்ரதக்ஷிண நமஸ்காரம் ஸமர்ப்பயாமி
(ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்யவும்.)

ராஜோபசாரங்கள்

(ஸ்வாமியை மகிழ்வித்து மரியாதை செய்வதற்காக சத்ரம், சாமரம் முதலிய உபசாரங்களை செய்கிறோம். இந்த உபசாரங்களுக்கு பதிலாக புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கலாம்.)

அனந்தோ நாகராஜோயம் ஆதபம் வாரயன் பணை:/
ஸேவதே நித்யத்ருப்தாத்மா தஸ்ய ச்சத்ரம் மயா த்ருதம்//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: சத்ரம் ஸமர்ப்பயாமி
க்ஷீராப்திர் துக்தபிந்தூன் வை கிரத்பிர் வீசிபாணிபி:/

ஸேவதே யம் மயா தஸ்மை சாமரம் வீஜ்யதே (அ)துனா//

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவாய நம:
சாமரம் வீஜயாமி (சாமரம் விசவும்)
வ்யஜனேன வீஜயாமி (விசிறியால் விசிறவும்)
கீதம் ச்’ராவயாமி     (கீர்த்தனை பாடவும்)
ந்ருத்தம் தர்ச’யாமி (நர்த்தனம் செய்யவும்)
வாத்யம் கோஷயாமி (வீணை, பிடில், மிருதங்கம் போன்ற வாத்தியங்கள் வாசிக்கலாம்.)

ஸமஸ்த ராஜோபசார பூஜான் ஸமர்ப்பயாமி
(புஷ்பம், அக்ஷதை சேர்க்கவும்)

அர்க்ய ப்ரதானம்

(அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும்)

மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா
ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம்,
உபாயன தானம் ச கரிஷ்யே//

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்/
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே//

ஓம் தம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி/
தன்னோ ஹஸௌ ப்ரசோதயாத்//

ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: இதமர்க்யம்
(என்று சொல்லி கையில் பால், புஷ்பம் சேர்த்து ஜலத்துடன் மூன்று முறை கிண்ணத்தில் விடவும்.)

அனாய பூஜயா ஸ்ரீ லக்ஷ்மீ ஹயக்ரீவ: ப்ரீயதாம்//

உபாயன தானம்

(பூஜையை செய்து வைத்த சாஸ்திரிகளுக்கு அல்லது வீட்டில் குரு ஸ்தானத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தானம் செய்ய வேண்டும்.)

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸனம்/
கந்தாதி ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்//
(ஆஸனத்தில் அமரச் செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)

(தாம்பூலம், தக்ஷிணை, வாயனம் ஆகியவற்றைக் பின்வரும் மந்த்ரம் சொல்லித் தர வேண்டும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:/
அனந்த புண்யபலதம் அத: சா’ந்திம் ப்ரயச்ச மே//

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவ ப்ரீதம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம//

புனர் பூஜை (யதாஸ்தானம்)

பூஜை அன்று சாயங்காலமோ அல்லது மறுநாள் காலையிலோ அஷ்டோத்தரம் ஜபித்து, தன்னால் இயன்றதை நிவேதனம் செய்து, தூப தீபம் கற்பூரம் காட்டி, பின்வரும் மந்திரம் சொல்லி

சு’த்தஸ்படிக ஸங்காஸோ ஜடாமண்டல ஸம்யுத:/
ஆதிமத்யாந்த ரஹித: ஸர்வவாகீச்’ வரேச்’வர://

ஸ்ரீலக்ஷ்மீ ஹயக்ரீவம் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி,
சோ’பனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச

வடக்கு முகமாக படத்தை நகர்த்தி வைக்கவும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar