பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில், காப்பு கட்டுத லுடன் கந்தசுஷ்டி விழா துவங்கியது.
கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமரிசையாக கொண்டாடப் படுகிறது.நேற்று முன்தினம் (நவம்., 8ல்) மாலை, 6:00 மணிக்கு, காப்பு கட்டுதலுடன், கந்த சஷ்டி விழா துவங்கியது. நேற்று (நவம்., 9ல்) மாலை, திருவிளக்கு பூஜையும், வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது.வரும், 12ம் தேதி, கரியகாளியம்மன் கோவில் முன், சூரனை வதம் செய்ய வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
13ம் தேதி, வேலாயுதசுவாமிக்கு உச்சிகால பூஜையும், மாலை, 6:00 மணிக்கு சிவலோகநாதர் கோவில் முன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரமும் நடக்கிறது.வரும், 14ம் தேதி காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. அதன்பின், வேலாயுதசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதரராக, திருவீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
வரும், 15ம் தேதி பகல், 12:00 மணிக்கு மகாபூஜையுடன் கந்தசஷ்டி விழா நிறைவடை கிறது.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல்அலுவலர் கந்தசாமி மற்றும் சஷ்டி வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.