பதிவு செய்த நாள்
10
நவ
2018
02:11
திருவண்ணாமலை: ஜீவ சமாதியடைந்த பூண்டிமகானின், 40வது குருபூஜை விழா நேற்று (நவம்., 9ல்) நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, பூண்டி கிராமத்தில், செய்யாற்றங்கரையில், கடந்த, 1959 முதல், பூண்டி மகான் தவமிருந்து வந்தார். அவர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பல சித்து விளையாட்டு மூலம், பக்தர்களின் குறைகளை தீர்த்தார். கடந்த, 1978ல், நவ.,3ல், ஜீவசாமதி அடைந்தார். இதனால், அவரது பக்தர்கள், ஜீவசமாதி அடைந்த இடத்தை வணங்கி வருகின்றனர். நேற்று, 40வது குரு பூஜை விழா நடந்தது. இதில், அவரது ஜீவ சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. பின், ஆசிரம வளாகத்தில், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், கலந்து கொண்டு வழிபட்டனர்.