பதிவு செய்த நாள்
10
நவ
2018
03:11
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி அருகே, கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (நவம்., 9ல்) தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.
இடங்கணசாலை, செல்லாண்டியம்மன் கோவிலில் நாளை (நவம்., 11ல்)கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை முன்னிட்டு, கடந்த, 28 காலை, 7:00 மணிக்கு முகூர்த்தகால் நடுதல், பக்தர்களுக்கு கங்கணம் கட்டுதல் நடந்தது. நேற்று (நவம்., 9ல்) காலை, 8:00 மணியளவில் சித்தர்கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்தை அடைந்தனர். மாலை, 4:00 மணியளவில் கணபதி ஹோமத்துடன் யாக பூஜை துவங்கியது. நாளை காலை, 7:00 -8:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.