பதிவு செய்த நாள்
10
நவ
2018
03:11
சூலூர்:கண்ணம்பாளையத்தில் தொடரும் கோவில் திருட்டுகளை தடுப்பது குறித்த ஆலோ சனை கூட்டம், நாளை (நவம்., 11ல்) நடக்கிறது.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையத்தில் உள்ள கண்ணம்மை அம்மன் கோவிலில், கடந்த, 5ல் முருகன் சிலை மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயின. அதற்கு முன், மகாலட்சுமி கோவிலிலும் திருட்டு நடந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்ணம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் திருட்டுகளை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை நடத்த ஊர் பெரியவர்கள் முடிவு செய்தனர். நாளை (நவம்., 11ல்) மாலை, 6:00 மணிக்கு கண்ணம்மை அம்மன் கோவில் வளாகத்தில் நடக்கும் கூட்டத்தில், ஊர் பெரியவர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கருத்து தெரிவிக்க, மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.