பதிவு செய்த நாள்
10
நவ
2018
03:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிகரித்து வரும் ஆன்மிக உணர்வால் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயில் களையும் தரிசிக்க பலர் விரும்புகின்றனர். இதற்காக கோயிலின் விபரங்களை அறிந்து கொள் வதில் மிகவும் அக்கறை காட்டுகின்றனர். இணையதளங்களின் வாயிலாக கோயில்களின் இருப்பிடங்களை தெரிந்து கொண்டாலும், அக்கோயில்களில் நடக்கும் பல்வேறு சிறப்பு திருவிழாக்களை எல்லோராலும் அறியமுடிவதில்லை. இந்நிலையில் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான, ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு தமிழ் ஆண்டும் உற்சவ விபரங்கள் குறித்த ஒரு அழகிய கையேடு கோயில் சார்பில் வெளியிடப்படுகிறது. இதை கடந்த சில ஆண்டுகளாக சிவகாசி ஸ்ரீராஜவன்ஷி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் மாணிக்க வாசகம் - ராஜவன்ஷி குடும்பத்தினர் உபயமாக அச்சடித்து கொடுக்கும் இறைபணியை செய்
கின்றனர்.
சித்திரை முதல் பங்குனி முடிய நடக்க உள்ள வாராந்திர, பஞ்சபர்வ, மாதாந்திர, வருடாந்திர உற்சவ விபரங்கள் உள்ளது. வருஷாபிஷேகம், குரு பெயர்ச்சி மற்றும் ராகு, கேது பெயர்ச்சி விபரங்களும், திருக்கோயில் வழிபாட்டு முறைகள், பூஜைகாலங்கள், விளக்கு பூஜை, அமா வாசை, கார்த்திகை, பிரதோஷம், பவுர்ணமி உட்பட ஒவ்வொரு மாதத்திலும் நடக்கும் விழாக் களின் விபரங்களும் உள்ளன. பக்தர்களுக்கு மிகுந்த வழிகாட்டியாக உள்ள கையேட்டை ஒவ்வொரு கோயில்களிலும் அதிகளவில் வெளியிட நல்ல உள்ளம் படைத்தவர்கள் முன்வருவதும் ஒரு இறைத்தொண்டாகும்.