பதிவு செய்த நாள்
11
நவ
2018
05:11
கம்பம்:சபரிமலை அய்யப்பன் தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்ய அனைத்து பக்தர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் பக்தர்கள் சிரமத்துள்ளாகிஉள்ளனர். சபரிமலை கோவிலுக்கு, 48 நாள் விரத மிருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். சில ஆண்டுகளாகதரிசனத்திற்கு, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.இந்தாண்டு முன்பதிவுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நிலக்கல்லில் இருந்து பம்பை வரை, கேரள அரசு பஸ்சில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தால் தான், சுவாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும்.
சாதாரண பஸ்சில் ஒரு நபருக்கு, 80 ரூபாய் கட்டணமாகவும், ஏசி பஸ்சில், 150 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.கடந்தாண்டு வரை, ஐந்து பேர் செல்வதென்றால், யாராவது ஒருவரின் ஆதார் எண், பிற அடையாள அட்டை வைத்திருந்தால் போதுமானது.தற்போது அந்த குழுவில் பயணம் செய்யும் அனைவரின் ஆதார் எண், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுஉள்ளன. கம்பத்தைச் சேர்ந்த, பக்தர் ஒருவர் கூறுகையில், ஆன்லைனில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள், பக்தர்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது.ஒரு பதிவிற்கு, 2 நிமிடங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. இல்லையெனில் முதலில் இருந்து தேவையான பதிவுகள் செய்ய வேண்டும். இந்த குளறுபடிகளை களைய, தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.