ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சத்திரப்பட்டியில் திருவாசக முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 12:11
ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி காசி பானலிங்கசுவாமி கோயிலில் உள்ள வேதாந்த மடத்தில் திருவாசக முற்றோதல் நடந்தது. சத்திரப்பட்டி சிவனடியார்கள் பஜனை குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.காலை 7:30 மணி முதல் பிற்பகல் வரை 1:45 வரை நடந்த பஜனையில் குழு தலைவர் முத்து மாடசாமி தலைமை வகித்து தேவார, திருவாசகப் பதிகங்களைப் பாடினர்.இறைவழிபாடு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை தொழிலதிபர் பால்கனி உள்ளிட்ட இறையடியார் செய்திருந்தனர்.