புதுச்சேரி :முத்தியால்பேட்டை கற்பக விநாயகர் கோவிலில் சங்காபிஷேகம் நடந்தது. கற்பக விநாயகர் கோவிலில், கும்பாபிஷேகம் நிறைவுற்று 7ம் ஆண்டு உற்சவ விழா நடந்து வருகிறது. இதையொட்டி, சிறப்பு வேள்வி, 108 சங்காபிஷேகம், அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.