பதிவு செய்த நாள்
13
நவ
2018
12:11
பெ.நா.பாளையம்:கோவையில் இன்று துவங்கும் ரத யாத்திரை, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வலம் வர உள்ளன.வரும் டிச., 23, 24, 25ல், பொங்கலூரில் சோடஷ மகாலட்சுமி மகா யாகம், கஜபூஜை, அஸ்வ பூஜை, கோ பூஜை நடக்கிறது.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விளக்கவும், யாகசாலை அமைக்க, வீட்டுக்கு ஒரு செங்கல் வாங்கவும், மகாலட்சுமி மகா ரதங்கள் வருகின்றன. இந்த யாத்திரை துவக்க விழா, கோவை காந்தி பார்க் முருகன் கோவில் அருகே இன்று (நவம்., 13ல்) காலை, 10:00க்கு துவங்குகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில், இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன், மாநில தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்தி கூறுகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வலம் வர, நான்கு ரதங்கள் தயார் செய்யப் பட்டுள்ளன. டிச., 22ல் பொங்கலூர் வந்தடையும் வகையில், பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கோவை வடக்கு இந்து முன்னணி சார்பில், அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் போன்ற தோற்றத்தில் ரதம் வடிவமைக்கப்பட்டு உள்ளது, என்றார்.