பதிவு செய்த நாள்
13
நவ
2018
01:11
சங்ககிரி: தேவூர், அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமியின் மனைவி உட்பட ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் ஊர்வலம் சென்றனர். சேலம் மாவட்டம், தேவூர் அம்மாபாளையத்தில், செல்வ விநாயகர், ஞானதண்டாயுதபாணி, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 15ம் தேதி, காலை, 8:00 மணிக்கு நடக்கவுள்ளது. நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. 9:30 மணிக்கு காவேரிப்பட்டி காவிரி ஆற்றிலிருந்து, ஏராளமான பக்தர்கள் புனிதநீர் தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். முதல்வர் பழனிசாமியின் மனைவி ராதா, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார். 15ம் தேதி கும்பாபிஷேகத்தில், முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.