பதிவு செய்த நாள்
14
நவ
2018
02:11
கோவை: கோவை, சிங்காநல்லூர் பகுதியில், அரவான் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருக்கல்யாண திருவிழா நடப்பதால் இன்று முதல், 20ம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் வழியாக செல்லும் இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள், ஆணையங்காடு ரோடு சந்திப்பிலிருந்து, வலது பக்கம் திரும்பி ஆணையங்காடு ரோடு, அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாக, வெள்ளலூர் ரோடு புதுப்பாலம் வழியாக வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள், சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர் மேம்பாலம் வழியாக பட்டணம் செல்லலாம்.
வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் இருசக்கர, இலகுரக வாகனங்கள், வெள்ளலூர் மேம்பாலம் சென்று வலது பக்கம் திரும்பி அக்ரஹார வீதி, பிள்ளையார் கோவில் வீதி, தேவேந்திரர் வீதி மற்றும் அஸ்தாந்திர நாயக்கர் வீதி வழியாக சென்று ஆணையங்காடு ரோடு வழியாக, திருச்சி ரோட்டை அடையலாம். வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் நோக்கி வரும் கனரக வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் பட்டணம் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.