பதிவு செய்த நாள்
15
நவ
2018
01:11
செஞ்சி: செஞ்சி சுந்தரவினாயகர் கோவி லில் சூரசம்ஹார விழா நடந்தது.செஞ்சி கிருஷ்ணா புரம் சுந்தரவினாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8 ம் தேதி துவங்கி நடந்து வந்தது.
திருமுருகன் தோற்றம் துவங்கி பார்வதி தேவியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் 12ம் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இரவு 8 மணிக்கு சூரசம்ஹார விழா நடந்தது.விழாவை முன்னிட்டு வானவேடிக்கை நடந்தது.
இதே போல் பெரியகரம் சுப்ரமணியர் கோவிலிலும் நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இரவு சூரசம்ஹார விழா நடந்தது.
* திண்டிவனம்: வானூர் அடுத்த இரும்பை கிராமத்தில் மகாளேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹார விழா நேற்று முன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. அதனையொட்டி வேல் வாங்கும் வைபவமும், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரம் நடந்தது. விழாவில், சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* தியாகதுருகம்: ரிஷிவந்தியத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு கடந்த 8 ம்தேதி கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி திருவீதியுலா நடந்தது.கடந்த 12 ம் தேதி கோவில் எதிரில் கம்பம் ஏறும் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் (நவம்., 13ல்) இரவு 8 மணிக்கு சூரசம்ஹார திருவிழா நடந்தது.
செங்குந்தர் சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் சூரபத்மன், முருகன் வேடமிட்டு ஊர்வலமாக வந்தனர். சம்ஹாரமூர்த்தியாக சுவாமி எழுந்தருளி கோவில் எதிரில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று (நவம்., 14ல்) சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி, தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவமும் நடந்தது. இன்று (நவம்., 15ல்)இடும்பன் பூஜை நடக்கிறது.