பதிவு செய்த நாள்
15
நவ
2018
01:11
சோமனூர்:கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் (நவம்., 13ல்) நடந்தது. நேற்று (நவம்., 14ல்) ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், திருக்கல்யாண வைபவம் நடந்தது.
காலை, 9:55க்கு துவங்கி, வேத மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக் கல்யாணம் நடைபெற்றது. காலை, 11:45க்கு மகா தீபாராதனை, மதியம், 12:30க்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) காலை, 8:00க்கு மூலவருக்கு அபிஷேகம்ம் நடந்தது. 11:00க்கு கரட்டுமேடு ரத்தினகிரி மருதாசலக்கடவுள் கோவிலில் வேல் பூஜை மற்றும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 4:00க்கு வீரபாகு தூது செல்லும் நிகழ்ச்சியை தொடர்ந்து, காலசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி, சூரபத்மனை வதம் செய்து, வேலும், மயிலுமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.
இரவு, 7:00க்கு சிறப்பு வேள்வி மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், 8:00க்கு வீதியுலா நடந்தது. நேற்று (நவம்., 14ல்) காலை, 9:00க்கு மூலவருக்கு அபிஷேகம், 10:00க்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம், காலை, 11:00க்கு மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா நடக்கிறது.
* இதேபோல், காரமடை அடுத்துள்ள குருந்தமலை வேலாயுத சுவாமி கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.