பதிவு செய்த நாள்
19
நவ
2018
03:11
கோவை:கோவையில் சபை பாகுபாடற்ற நிலையில், அனைத்து சர்ச் சார்பில் கிறிஸ்துமஸ் (கேரோல் சர்வீஸ்) துதி பாடல் ஆராதனை, திருச்சி ரோடு சி.எஸ்.ஐ.,கிறிஸ்துநாதர் சர்ச்
வளாகத்தில் நடந்தது.சி.எஸ்.ஐ.,திருமண்டல பிஷப் தீமோத்தி ரவீந்திரன், கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் முன்னிலை வகித்தனர்.சி.எஸ்.ஐ.,
கத்தோலிக்க, டி.இ.எல்.சி., ஏ.ஜி., ஐ.பி.ஏ., சி.பி.எம்., ஆகிய 64 சபைகளை சேர்ந்த பாடல் குழுவினர், நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.அடுத்தமாதம் 25ம் தேதி இயேசுவின் பிறப்பு-கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, அனைத்து சபையினரும் ஒருங்கிணைந்து, கிறிஸ்து பிறப்பு பற்றிய பாடல்களை துதித்து மகிழ்ந்தனர்.