கங்கை நதிக்கரையில் பிறந்து கடைசியில் அருணாசலத்தில் லயித்த யோகி ராம்சுரத்குமாரை கபீர் அவதாரம் என்றார் காஞ்சி மகாபெரியவர். யோகி ராம்சுரத்குமார் பிறந்தது 1-12-1918; அவரது நூற்றாண்டு ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ட்ரூமன் கேய்லர் வாட்லங்டன் என்ற வேறு நாட்டவரே 1971-ல் ‘யோகி ராம்சுரத்குமார் - தெய்வக்குழந்தை ’ என்று யோகியைப் பற்றி முதலில் நூல் வெளியிட்டார். அவரிடம் இவர், இந்த பிச்சைக்காரன் 1952-ல் ஸ்வாமிதாஸரிடம் இறந்துவிட்டான். இருப்பது ‘அப்பாவே ’ அவர் ஆணைப்படியே நான் நடக்கிறேன். எனக்கென்று சுயமாக எதுவுமில்லை ” என்றார். அவரைத் தொடர்ந்து ரமணாசிரமம் வரும் பல வெளிநாட்டினர் இவரையும் வந்து தரிசித்துள்ளனர்; வியந்துள்ளனர். சிருங்கேரி ஆச்சார்யார், அம்ருதானந்தமயி போன்றவர்களும், ‘அவர் மகாயோகி ஆயிற்றே. பிச்சைக்காரன் போல்தான் தெரிவார். அவர் மகிமை எவருக்குப் புரியும்’ என்றனர். ஒரு அமெரிக்கர், ‘அமெரிக்கா வாருங்களேன்; அழைத்துச்செல்வேன்’ என்றார். ‘அண்ணாமலையான் என்னை நகரவிட மாட்டான்’ என்றார். 20-2-2001-ல் யோகி ராம்சுரத்குமார்அவரது ஆவி விடியற்காலை பிரிந்தது. ஆசிரமத்திலேயே சமாதி வைத்து, லிங்கம் கோயில் அமைத்தனர். சாய்பாபா சமாதி போன்று இவரது சமாதியும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறது.