Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மறந்துடாதீங்க பக்தர்களே! முருகப்பெருமானின் வாகனங்கள்! முருகப்பெருமானின் வாகனங்கள்!
முதல் பக்கம் » துளிகள்
அண்ணாமலையானே... அன்பில் கலந்தோனே!
எழுத்தின் அளவு:
அண்ணாமலையானே... அன்பில் கலந்தோனே!

பதிவு செய்த நாள்

20 நவ
2018
12:11

திருக்கார்த்திகையன்று ஞானசம்பந்தரின் தேவாரத்தைப் படித்தால் சிவனருளால் நல்வாழ்வு அமையும்.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவு அதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமமழை துறுகல் மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை அணையும்பொழில் அண்ணாமலை அண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை இலரே.

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடிதொழுவாரன புகழே.

உதிரும்மயிர் இடுவெண்தலை கலனாஉல கெல்லாம்
எதிரும்பலி உணல்ஆகவும் எருதுஏறுவது அல்லால்
முதிரும் சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிரும்கழல் அடிகட்குஇடம் அண்ணாமலை அதுவே.

மரவம்சிலை தரளம்மிகு மணிஉந்துவெள் ளருவி
அரவம்செய முரவம்படும் அண்ணாமலை அண்ணல்
உரவம்சடை உலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவம்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவார்அது பருகிக்
கருகும்மிடறு உடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக்கு உறுநோய்அடை யாவே.

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்தலை உதையுண்டுஅவை உருள
எரியாடிய இறைவர்க்குஇடம் இனவண்டு இசைமுரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை அதுவே.

ஒளிறூபுலி அதள்ஆடையன் உமைஅஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்இரா வணனை
அளறூபட அடர்த்தான்இடம் அண்ணாமலை அதுவே.

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவனடி சரணே.

வேர்வந்துற மாசுஊர்தர வெயில்நின்று உழல்வாரும்
மார்பம்புதை மலிசீவரம் மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை அண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே.

வெம்புந்திய கதிரோன்ஒளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ எயில்எய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயில்ஆலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar