பதிவு செய்த நாள்
20
நவ
2018
01:11
காஞ்சிபுரம் : கார்த்திகைத் தீப விழா பாகாப்புப் பணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, 350 போலீசார், திருவண்ணாமலை செல்லவுள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகைத் தீப விழா சிறப்பாக நடக்கும்.திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் மஹா தீபத்தைக் காண, லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர்.
இந்தாண்டு விழா, 14ல், கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், தீப விழாவன்று செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் செய்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்பாக, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார், 350 பேர், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
கார்த்திகைத் தீபத் திருவிழாவிற்கு ஒரு நாள் முன், அதாவது, 22ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து, போலீசார் செல்லவுள்ளனர்.